அதிகரிப்பு
இந்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு திட்டத்தால் தமிழ்நாட்டின் நிதி சுமை ரூபாய் ஐந்தாயிரம் கோடி வரை அதிகரிக்கும் ஆளுநர் உரையில் தகவல் தகுதி தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இறுதி செமஸ்டர் சட்ட மாணவர்கள் வழக்குரைஞர் தகுதி தேர்வு எழுதலாம் உச்ச…
நெல்லை அருகே 450 ஆண்டு பழமையான கல்வெட்டு, பீரங்கிக் குண்டுகள் கண்டெடுப்பு
நெல்லை, ஜன.22 நெல்லை மானூர் அருகே செழியநல்லூரில், 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டும் ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த பீரங்கிக் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 450 ஆண்டுக்கு முன்புள்ள வரலாற்றை ஆய்வு செய்ய வாய்ப்பு கிட்டியுள்ளதாக தொல்லியல் துறை மாணவர்கள் தெரிவித்தனர். நெல்லை…
மதுரை, விருதுநகர், நாகர்கோவிலுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
* மதுரை திருமங்கலத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு எரிமலை மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். * நாகர்கோவிலுக்கு நள்ளிரவு 1 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மா.மு. சுப்பிரமணியன், வெற்றிவேந்தன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்…
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ ரயில்வே வாரியம் இறுதிக்கட்ட ஒப்புதல் – பிப்ரவரியில் சேவை
சென்னை, ஜன. 22- சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூவிருந்தவல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு ரயில்வே வாரியம் தனது இறுதிக்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது.…
ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு!
அரசியலமைப்பு சட்டத்தின் 226ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தை அணுக அமலாக்கத் துறைக்கு உரிமை உள்ளதா? புதுடில்லி, ஜன.22-அரசியலமைப்பு சட்டத்தின் 226ஆவது பிரிவின் கீழ், உயர்நீதி மன்றம் அணுக அமலாக்கத் துறைக்கு உரிமை உள்ளதா என்று ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதம்…
ரயில்வே குரூப் – டி வேலைவாய்ப்பு 22 ஆயிரம் பணியிடங்களுக்கான விண்ணப்பத் தேதிகள் மாற்றம்
புதுடில்லி, ஜன.22- சுமார் 22,000 ரயில்வே குரூப்-டி பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 31 முதல் தொடங்கி மார்ச் 2 வரை நடைபெறும் என தேதிகள் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. இந்திய ரயில்வேயில் பணிபுரியக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகி…
அறிவியல் குறுஞ்செய்திகள்!
கரோனா முடக்க காலத்தில், நகரப் பறவைகளின் அலகுகள் வேகமாக மாற்றமடைந்திருப்பதை கலிபோர்னியா பல்கலை. ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த இரண்டு ஆண்டுகளில், மனிதர்கள் வீசும் உணவுக்கழிவுகள் குறையவே, பறவைகளின் இரையில் நேர்ந்த மாற்றத் தினாலேயே, இந்தப் பரிணாம மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய…
புரிந்துகொள்வீர் புவி வெப்பமயமாதலை!
கிரீன்லாந்து நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ப்ருதோ பனிச்சிகரத்தில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆழ்துளை ஆய்வு, ஓர் அதிரடி உண்மையைத் வெளிப்படுத்தியுள்ளது. ஏறத்தாழ 500 மீட்டர் ஆழம் துளையிட்டு ஆய்வு செய்ததில், இந்த மாபெரும் பனிச்சிகரம் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக மறைந்து…
விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகள்
தீ, மெழுகுவர்த்தி, மின்விளக்கு, தெருவிளக்கு போன்றவற்றை சுற்றி சுற்றி விட்டில் பூச்சிகள் முதல் பல பூச்சிகள் வட்டமடிப்பதைக் கண்டிருப்போம். பிரகாசமான செயற்கை ஒளியில் பூச்சிகள் கண் கூசி சிறைப்படுகின்றன என ஒருகாலத்தில் இதனை கருதினர். இரவில் நிலவைவிட செயற்கை மின்விளக்கு பிரகாசமாக இருப்பதால்…
ஸநாதன ஒழிப்புப் பேச்சு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியின் தீர்ப்பு அபத்தமானது சி.பி.எம். செயலாளர் சண்முகம் கருத்து
மதுரை, ஜன.22 ஸநாதன ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதியின் தீர்ப்பு அபத்தமானது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அமித் மாளவியாவின் பேச்சுக்கு எதிரான வழக்கை ரத்து செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. நீதிபதியின் கருத்துகள் மறுபரிசீலனைக்கு…
