இயக்க நிதி
மும்பையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் இறை ச. இராஜேந்திரன் இயக்க நிதியாக ரூ.15000/மும், அதோடு தங்கள் இல்லத்தில் சேமித்த உண்டியல் பெட்டியையும் தமிழர் தலைவர் அவர்களிடத்தில் வழங்கினார்கள்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார்.
முனைவர் பட்டம் பெற்றுள்ள திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களுக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார். அறக்கட்டளைப் பணிகளில் சிறப்பாக உதவிடும் ஆடிட்டர் அர. இராமச்சந்திரன் அவர்களுக்குத் தமிழர் தலைவர்…
இந்நாள் – அந்நாள்
‘சிந்தனைச் சிற்பி’ ம. சிங்காரவேலர் நினைவு நாள் இன்று (11.02.1946) தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடியாகவும், சிறந்த சிந்தனையாளராகவும் திகழ்ந்த "சிந்தனைச் சிற்பி" சிங்காரவேலர் மறைவு நாள் இன்று (11.2.1946). இந்தியாவில் முதன்முதலில் (1923, மே 1) உழைப்பாளர் நாளைக் கொண்டாடியவர்…
செயல்திறனற்ற வட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதா? சந்திரபாபு நாயுடுவும் எதிர்ப்புக் குரல்
அமராவதி, பிப்.11 செயல்திறனற்ற வட மாநிலங்களுக்கு, தென் மாநிலங்களைவிட அதிக நிதி ஒதுக்கும் ஒன்றிய அரசின் செயல் தவறானது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தெரிவித்துள்ளார். அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, நாடு செழிக்க வேண்டுமானால் அனைத்து…
ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு 22ஆம் தேதி தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தொடக்கம் கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க. அழைப்பு
சென்னை, பிப்.11 டில்லியில் ராகுல் காந்தி தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்த நிலையில் 22ஆம் தேதி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. ராகுல்காந்தியுடன் சந்திப்பு தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வரும்…
ஒன்றிய நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு வருமான உயர்வுக்கு வழி இல்லை வேளாண் துறை நிபுணர் நாராயண மூர்த்தி கருத்து
ஒன்றிய நிதிநிலை அறிக்கையால் விவசாயி களுக்கு வருமான உயர்வுக்கு வழி இல்லை என்று வேளாண் துறை நிபுணர் நாராயண மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். அது வருமாறு: வருமான உயர்வுக்கு வழியில்லை ஆயினும், இந்தப் பிரம்மாண்டமான திட்டங்ளுக்கு மத்தியில் ஒரு கசப்பான உண்மை…
‘உ.பி.யில் ஒரு திரைப்படத்தின்மீதான சர்ச்சை’ – எந்த அடிப்படையில்?
இந்தியில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் 'கூஸ்கோர் பண்டட்' (Ghooskhor Pandat) என்ற படம் உருவாகி உள்ளது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் குறித்த அறிவிப்பை ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனம் அண்மையில் வெளியிட்டதும் தலைப்புக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘கூஸ்கோர்’…
தர்மம் என்பது
கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது ‘குடிஅரசு’ 3.11.1929
ஆன்மிகம் அறிவைக் கொடுக்கிறதா? கெடுக்கிறதா? (4) மதிக்கு ஒவ்வா மகா சிவராத்திரி!
மஞ்சை வசந்தன் சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப் போல், சைவர்கள் என்று கருதக் கூடியவர்களின் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. இந்தச் சிவராத்திரி…
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானத் தடை கோரிய வழக்குகள் தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, பிப். 11- பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் குடியிருப்பு வளாகம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தனியார்…
