அபுஜா, ஜூன் 24- ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணம், கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்து நடக்கும் வன்முறைச் நிகழ்வுகளால் பெரும் பதற்றத்துடனேயே காணப்பட்டு வருகிறது. ஆயுதமேந்திய பல் வேறு கும்பல்களின் நடமாட்டம் இங்குள்ள கிராமப்புறங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அங்குள்ள பொக்கோஸ் நகரின் காவெல் கிராமத் தில், மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் திடீரென ஊடுருவிய ஆயுதமேந்திய அடை யாளம் தெரியாத கும்பல் ஒன்று, கண்மூடித்தன மாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு அலறிய டித்தபடி ஓடிய அப் பாவி மக்கள் மீது அந்த பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுட்டனர்.
இந்த பயங்கர தாக் குதலில் பெண்கள் உள்பட 20 பேர் நிகழ்வூ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல றிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அக்கும்பலுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடு பட்டதைத் தொடர்ந்து அவர்கள் காட்டுப் பகுதிக்குள் தப்பியோடினர்.
