கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு விரைவில் நலமடைந்து இல்லத்திற்குத் திரும்புவார் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் இருக்கிறது!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி சென்னை, பிப்.24 – கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு விரைவில் நலமடைந்து அவருடைய இல்லத்திற்குத் திரும்புவார் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் இருக்கிறது என்று செய்தியாளர்களிடையே கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.…
‘திரிசூலங்கள்!’
சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு மாற்றுப் பெயர் சூட்ட வேண்டுமென்றால் ‘அறிவு விடுதலை இயக்கம்’ என்பது பொருத்தமாக இருக்கும் என்றார் சுயமரியாதைச் சூரியனாம் தந்தை பெரியார். ஆமாம் – மனிதனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு இருந்தும், அதனை எல்லா இடத்திலும் பயன்படுத்த முடியாத…
வாழ்க்கைக்கேற்ற அறிவுரை
நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, கை சுடும் தொடாதே என்று அனுபவ முறையில் நன்மை தீமைகளைக் கற்பிப்பதின் மூலம் சீக்கிரம் சுலபத்தில் கண்டிப்பாய் ஒழுக்கமான வாழ்க்கையை உண்டாக்க முடியாதா? ‘குடிஅரசு’ 7.4.1929
இப்படி ஒரு மதவெறியா? ‘மோடியை திட்டுபவர்களுக்கு’ போர்வை இல்லை… முஸ்லிம் பெண்களிடம் வழங்கிய போர்வையைத் திரும்பப் பெற்ற பா.ஜ.க. தலைவர்
டோங்க், பிப்.24- ராஜஸ்தானில் பிரதமர் மோடி பிப்.28 அன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் இச்சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களை அழைக்க ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் உள்ள கரேடா என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார் பாஜக முன்னாள் எம்.பி. சுக்பீர் சிங் ஜானபுரியா. பிரதமர் மோடியின்…
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி!
சென்னை, பிப்.24- தமிழ்நாட்டின் மொத்த 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.அய்.ஆா்.) பிந்தைய வாக்காளா் இறுதிப் பட்டியல் நேற்று (23.2.2026) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தலைமைத் தோ்தல் அதிகாரி…
ரூ. 5 ஆயிரம் உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி!
சென்னை, பிப்.24- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு நேற்று (23.2.2026) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் திட்டங்களை நிறுவவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள திட்டங்களை விரிவாக்கம் செய்யவும் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.…
ஒரு பெண் கல்வி கற்றால், அந்தக் குடும்பத்தின் 5 தலைமுறை உயரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை, பிப்.24- இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.31 கோடியே 45 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.2.2026) திறந்து வைத்தார். விழாவில் அவர்…
சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு வினாத்தாள்களில் குளறுபடி? நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
சென்னை, பிப்.24- சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வழங்கப்படும் வெவ்வேறு வினாத்தாள் தொகுப்புகளுக்கு (Question Paper Sets) இடையே கடினத்தன்மையில் பெரும் பாரபட்சம் இருப்பதாக எழுந்துள்ள புகார், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள்களில் குளறுபடி மத்திய…
திருப்பதி ஏழுமலையான் ‘அவதாரம்’ எடுத்து வந்திருப்பாரோ! தரிசனத்திற்கு வரிசையில் சென்ற பெண் பக்தரை பாம்பு கடித்தது!
திருப்பதி, பிப்.24 தெலங்கானா மாநிலம் பூபால பள்ளியைச் சேர்ந்தவர் மவுனிகா (வயது 27). இவர் கடந்த 22.2.2026 அன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காகச் சென்றிருந்தார். ரூ.300 தரிசன அனுமதிச் சீட்டில் தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்தார். தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்ததால்…
தோழர் டி.டி.வி.தினகரனின் கூற்றுக்கு மறுப்பு!
தனியார் யூடியூப் நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்று, செய்தியாளர்களைச் சந்தித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு.டி.டி.வி.தினகரன் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘‘திராவிடம், நாத்திகம் போன்ற கொள்கைகளையெல்லாம் அவரவர் மனதில் வைத்துக் கொள்ளும் அளவுக்குத் தான் இருக்கிறது.…
