சந்தா தொகை
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக 67ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.28000அய் குமரி மாவட்ட கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் வழங்கினர்.
இணையேற்பு விழா
வி.சாரதா-விஜய பார்த்திபன் இணையரின் மகன் வி.காந்திக்கும், வா.நேரு-நே.சொர்ணம் இணையரின் மகள் சொ.நே.அறிவுமதிக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்தார். உடன் இராஜா அருண்மொழி, வா.தமிழ்ச்செல்வன், சொ.நே. அன்புமணி, மதுரை திராவிடர் கழகக் காப்பாளர்…
செங்கோட்டையன் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் முழு ஆதரவு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
திண்டுக்கல், செப். 8- மேனாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார். 10 நாட்கள் கெடு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த செங்கோட்டையன், அ.தி.மு.க.வை சேர்ந்த அனைவரையும்…
திராவிட மாணவர் கழகம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிட்டுள்ள (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் (DSF) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது (திருச்சி, 8.9.2025)
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி, செப். 8- கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் 5.9.2025 - வெள்ளிக்கிமை மாலை 4.00 மணி அளவில் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாரூர் கீழ்குப்பத்தில் கூட்டம் நடைபெற்றது. கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்து கழக செயல்பாடுகள் குறித்து…
இருங்களாக்குறிச்சி வி.தமிழரசி படத்திறப்பு- நினைவேந்தல்
செந்துறை, செப். 8- அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் இருங்களாக்குறிச்சி கிராமத்தை சார்ந்த விசுவநாதனின் வாழ்விணையரும், மாநில ப.க அமைப்பாளர் தங்கசிவ மூர்த்தியின் மாமியாரும், ஆசிரியர் சிவசக்தி, வேளாண் அலுவலர் வேல்முருகன் ஆகியோரின் தாயாருமான தமிழரசி 27.8.2025 அன்று இயற்கை எய்தியதை…
பெரியார் உலகத்திற்கு 10 லட்சம் நிதி திரட்டிட, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநில மாநாட்டில் குடும்பம் குடும்பமாக பங்கேற்க அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
அரியலூர், செப். 8- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் செந்துறை ஒன்றியம் இருங்களாக் குறிச்சி வேல்முருகன் இல்லத்தில் நடை பெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செந்துறை ஒன்றிய தலைவர் முத்தமிழ் செல்வன்…
மதுரையில் நடைபெற்ற பெரியார் உலகம் நிதியளிப்பு மாநாட்டில் கழகத் தலைவர் தத்துவ விளக்க உரை!
பெரியார் என்ற பேராயுதம் தான் நம் போராயுதம் பெரியார் இந்தியாவை ஆளப்போகிறார்; ஆசியாவை ஆளப்போகிறார்; உலகையே ஆளப்போகிறார்! பெரியார் உலகமயம்! உலகம் பெரியார் மயம்! மதுரை, செப். 8- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மற்றும் ‘குடிஅரசு' இதழ் நூற்றாண்டு விழாவில்…
அப்பா – மகன்
கேட்டுச் சொல்! மகன்: அ.தி.மு.க.வின் அழுத் தத்தாலேயே மகளிருக்கு உரிமைத் தொகை கிடைத்தது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: அப்படியா! அவர்களின் அ.தி.மு.க. ஆட்சியில் ஏன் கொடுக்கவில்லை என்பதைக் கேட்டுச் சொல், மகனே!
மூடநம்பிக்கையின் கோரம்! மந்திரவாதி என சந்தேகம்: இணையர் அடித்துக் கொலை; வீடு தீ வைத்து எரிப்பு!
கட்டாக், செப். 7 மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிகழ்வைத் தொடர்ந்து, மந்திரவாதி எனச் சந்தேகிக்கப்பட்ட ஒரு இணையர் அடித்துக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களது வீட்டையும் கும்பல் ஒன்று தீ வைத்து எரித்ததாகக்…
