‘திராவிட மாடல்’ ஆட்சியில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
சென்னை, ஏப்.29 இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: மகத்தான சாதனை. திராவிட மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக…
வாக்கு எண்ணும் மய்யத்தில் ‘ஜனநாயகன்’ படம் பார்த்தவர் கைது!
சென்னை, ஏப்.29 சென்னையில் வாக்கு எண்ணும் மய்யத்தில் நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகம்’ படம் பார்த்த தவெக ஆதரவாளர் யுவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழக வாக்கு எண்ணும் மய்யத்தின் சிசிடிவி அறையில் தொழில் நுட்பத் தலைமை கண்காணிப்பாளராக…
தமிழர் தலைவர் வாழ்த்து
வழக்குரைஞர் சண்முகப்பிரியன் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை,29.4.2026)
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
செல்வி – பெரியார் மாணாக்கனின் 29ஆம் ஆண்டு மணநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 29.4.2026)
வாழ்த்து
தனலட்சுமி – தங்கமணியின் 36ஆவது ஆண்டு மண நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 29.4.2026)
தமிழர் தலைவருடன் சந்திப்பு…
தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகாரத்துவ மய்யத்தின் ஆண்டு விழாவிற்கு தமிழர் தலைவரை அழைத்திட அந்த மய்யத்தின் பொறுப்பாளர் ரமேஷ்பாபு சென்னை பெரியார் திடலுக்கு நேரில் வருகை தந்தார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் பிரசுரங்களை தெலுங்கு மொழியில் மொழி…
தீபாவளிப் பண்டிகையில் எத்தனை மூடநம்பிக்கைகள் உள்ளன? துணைத் தலைவர் கவிஞர் அவர்களின் கேள்வியும் – பெரியார் பிஞ்சுகளின் பதில்களும்!
தஞ்சை, ஏப்ரல்.29 பழகு முகாமில் முதல் நாள் மாலையில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் பிஞ்சுகளுக்கு வகுப்பு எடுத்தார். அதில், "தீபாவளிப் பண்டிகையில் எத்தனை மூடநம்பிக்கைகள் இருக்கின்றன?’’ என்றொரு கேள்வி கேட்டார். பெரியார் பிஞ்சுகளை மேடைக்கு வரச்…
புதுச்சேரி மக்களை நம்பாத ரங்கசாமி! மீண்டும் முதலமைச்சராக ஜாதகத்தை வைத்து சிறப்பு பூஜை
சூலூர், ஏப்.29 கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டையை அடுத்த மலைப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தென்சேரி மலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோயிலுக்குச் சென்ற புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி கோயில் மண்டபத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வழிபாடு செய்தார். அப்போது…
அரசு அதிகாரிமீது கழிவுநீரை ஊற்றிய வழக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கு சிறைத் தண்டனை!
சிந்துதுர்க், ஏப்.29 மகாராட்டிரா மாநிலத்தில் அரசு அதிகாரியை அவமதித்து, அவர் மீது கழிவு நீரை ஊற்றிய வழக்கில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சிந்துதுர்க் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு…
தமிழ்நாட்டில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி!
சென்னை, ஏப். 29 இரண்டாவது நிதியாண்டாக இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்துள்ளதாக ஒன்றிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. 2024-2025 ஆம் நிதியாண்டில் 11.29 சதவிகிதம் என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டி யிருந்த தமிழ்நாடு மாநிலம்,…
