தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இழுபறி!
அய்ந்து மாநில சட்டபேரவைத் தேர்தல் முடிவுகள்: மூன்று மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு! சென்னை, மே 4 தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய அய்ந்து மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.…
34 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவன செயல்பாடுகள் நிறுத்தம்
வெஸ்ட் பாம் பீச், மே 4- அமெரிக்காவில் மிக குறைந்த கட்டணச் சலுகைகள் மூலம் கடந்த 34 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனமானது மஞ்சள் நிற விமானங்களை கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகளை இயக்கியது. சுமார் 17ஆயிரம்…
அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையைத் தவிர்த்து 1.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயுடன் ஹார்மூஸ் நீரிணையை கடந்த ஈரான் கப்பல்
தெஹ்ரான் / ஜகார்த்தா, மே 4- அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளையும், கடற்படை முற்றுகையையும் மீறி, ஈரானின் பிரம்மாண்டமான 'சூப்பர்-டேங்கர்' கப்பல் வெற்றிகரமாக பன்னாட்டு கடற்பரப்பைக் கடந்துள்ளது. சுமார் 1.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்து கொண்டு, ஹார்மூஸ் நீரிணையை…
கென்யாவில் கனமழை, நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு
நைரோபி, மே 4- கென்யாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். கென்யாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள தாராகா நிதி, எல்கேயோ-மராக் வெட் மற்றும் கியாம்பு…
அமெரிக்கா முற்றுகை: ஈரானில் 6.9 கோடி பேரல் கச்சா எண்ணெய் தேக்கம்
டெஹ்ரான், மே4- அமெரிக்காவுடன், ஈரான் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்ய அதிபர் ட்ரம்ப் நெருக்கடி கொடுத்து வருகிறார். ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளதால், அங்கிருந்து எந்த எண்ணெய் கப்பலும் வெளியே செல்ல அனு மதிக்கப்படவில்லை. இதனால் ஈரானின் கச்சா…
அமெரிக்கா போரை நிறுத்த 14 அம்ச அமைதித் திட்டத்தை வழங்கிவிட்டோம்: ஈரான் அறிவிப்பு
டெஹ்ரான், மே 4- போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது. புதிய சமரசத் திட்டம் அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல்…
தங்கமணி குணசீலனுக்கு வீர வணக்கம்!
கொள்கை வீராங்கனை வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலைவராக இருந்து சிறப்பான வகையில் இயக்கப் பணிகளை ஆற்றியவரும், கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் முன் வரிசையில் நின்றவரும், வடசென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளராக இருந்து சீரிய கழகப் பணியாற்றி,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 4.5.2026
தி இந்து: * ’சர்னா’ மத தனி அடையாளம் வேண்டும்: 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பழங்குடியினரின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, அவர்களை மற்ற மதங்களை பின்பற்றுபவர்களிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளம் காண சர்னா மதச் சட்டம் அவசியம், குடியரசுத் தலைவர்…
பெரியார் விடுக்கும் வினா! (1959)
நமது நாட்டில் நிலவி வருகின்ற ஜாதி முறை மாற வேண்டாமா? ஜாதிக் கொடுமைகளும், இழிவுக்குக் காரணமான கடவுள், மதம், சாத்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டாமா? இவையன்றி, சமுதாயத் துறையில் நாம் 2000, 3000 ஆண்டுகளாக இழிமக்களாகவும், சூத்திரங்களாகவும் இருந்து வருகின்ற இழிநிலை எப்படித்…
கபிஸ்தலத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
கபிஸ்தலம், மே 4- கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில் புரட்சி கவிஞர் 136ஆவது பிறந்தநாள் மற்றும் தொழிலாளர் நாள் விழா 1.5.2026 வெள்ளி மாலை 6:30 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய…
