கடந்த அய்ந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் 633 பேர் உயிரிழப்பு
ஒன்றிய அமைச்சர் தகவல் புதுடில்லி, ஜூலை 29 கடந்த அய்ந்து ஆண்டுகளில், வெளிநாடுகளுக்கு படிக்க சென்ற 633 மாணவர்கள் உயிரிழந்ததாக ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. அதிகபட்சமாக கனடாவில் 172 மாணவர்கள் இறந்துள்ளனர். இது தொடர்பாக, மக்களவையில் ஒன்றிய வெளியுறவு இணை…
உலக கல்லீரல் அலர்ஜி நாள் பிறக்கும் குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 29- கல்லீரல் அழற்சி நோய்களை ஒழிக்க, பிறக்கும் குழந்தைகளுக்கு மறக்காமல் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். உலகக் கல்லீரல் அழற்சி…
ஜாதி மறுப்பு இணையேற்பு
சுபா - விக்னேஷ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மணமக்கள் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் இன்று (29.7.2024) நடத்தி வைத்தார். (பெரியார் திடல், செcன்னை)
மலேசியாவில் ராஜா மூஸா தோட்ட தமிழ் மாணவர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு
மலேசியா சிலாங்கூர் மாநிலம் ராஜா மூஸா தோட்ட தமிழ் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் திருக்குறள் மற்றும் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல்களை அன்பளிப்பாக மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி வழங்கினார். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின்…
தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
நாள்: 31.7.2024 புதன்கிழமை மாலை 4 மணி இடம்: வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம், சென்னை தலைமை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) உரிமைக் குரல் எழுப்ப அனைவரும் வருக! ஒருங்கிணைப்பு: திராவிடர் கழகம்
புதிய குற்றவியல் சட்டங்கள் : உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு அகில இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்துவோம்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தகவல்
சென்னை, ஜூலை 29- புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அகில இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்தவுள்ளதாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா…
குழந்தை திருமண தடை சட்டம் அனைத்து மதத்துக்கும் பொருந்தும் கேரள உயர் நீதிமன்றம் ஆணை
கொச்சி, ஜூலை 29- 'குழந்தை திருமண தடை சட்டம், மத வேறுபாடின்றி அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பொருந்தும்' என, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவின் பாலக் காட்டில் வசிக்கும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிறுமிக்கு, 2012 டிச., 30இல் திருமணம்…
கேரளத்தில் புதிய முறையில் கல்வித் திட்டம்
திருவனந்தபுரம், ஜூலை 29 கேரளாவில் மாநில அரசு தனது ‘புத்தகப்பை இல்லா நாட்கள்’ திட்ட முன்முயற்சியை முன்னெடுத்து செல்ல ஆலோசித்து வருவதால், மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகள் இனி மாதத்தில் நான்கு நாட்கள் அதிக எடையுள்ள பைகளை எடுத்துச் செல்லவேண்டிய தேவை இருக்காது.…
தமிழ்நாடு அரசின் முயற்சி வெற்றி கருநாடக அரசு காவிரியில் நீர் திறப்பு
மேட்டூர் அணை நீர்மட்டம் 110 அடியாக உயர்வு காவிரி கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை மேட்டூர், ஜூலை 29 கருநாடகாவில் இருந்து காவிரி யில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
சென்னை, ஜூலை 29- சென்னை கொசப் பேட்டையில் உள்ள ஆதரவற்ற இல்லத்தில் தங்கியிருக்கும் பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மய்யத்தின் மேனாள் முதல்வர் எம்.கே.கருப் பையாவின் மூத்த மகள் சூர்யா கடந்த…
ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வை எதிர்த்து வழக்கு
சென்னை, ஜூலை 29 கடல்சார் பல்கலை நடத்திய நுழைவுத் தேர்வை எதிர்த்த வழக்கில், ஒன்றிய அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் நடுக்குப் பத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் சார்பில், அவரது தந்தை சரவணன் தாக்கல் செய்த…
