கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தொகுதி மறுசீரமைப்பு எண்ணிக்கை சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல - மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சினை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை. *ஒப்பந்த பணிகளில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளித்திடும் மசோதாவை கருநாடக அரசு சட்டமன்றத்தில்…
பெரியார் விடுக்கும் வினா! (1596)
இந்த நாட்டை ஆண்ட மூவேந்தர்களோ, முஸ்லீம்களோ, நாயக்கர்களோ, மராட்டியரோ, கடைசியாக ஆண்ட வெள்ளையரோ எவருமே – தமக்கு ஆபத்து இல்லாமலிருந்தால் போதும் என்று எண்ணி இருந்தார்களே தவிர – நமது சமுதாய மக்கள் கீழ் நிலைப்படுத்தப்பட்டு அனுபவித்த கொடுமைகளைப் போக்க முயன்றார்களா?…
காவேரிப்பட்டணம் இராஜேஸ்வரி மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
காவேரிப்பட்டணம், மார்ச் 22- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் திராவிடர் கழக மேனாள் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம் அவர்களின் உடன்பிறந்த அண்ணார் காவேரிப்பட்டணம் தா.சண்முகம் அவர்களின் வாழ்விணையர் பணி நிறைவுப் பெற்ற அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் டி.இராஜேஸ்வரி அவர்கள் வயது…
3ஆவது கடலூர் புத்தகத் திருவிழா- 2025
கடலூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (BAPASI) இணைந்து நடத்தும் 3-ஆவது கடலூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 50 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும்,…
நன்கொடை
தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்-நாகவல்லி ஆகியோரின் பேரனும், மு.மணிமாறன்-ஓவியா ஆகியோரின் மகனுமாக வியனின் 5ஆம் ஆண்டு பிறந்தநாள் (21.3.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 வழங்கினர். வாழ்த்துகள்!
மொழிப் போராட்டம் (8) ஒரே அரசியல் மொழியா? நாவலர் இரா. நெடுஞ்செழியன்
பொதுமொழி தேவை என்பதற்கு இந்தி ஆதரிப் பாளர்கள் கூறிய காரணங்கள்: ஒன்று, விடுதலைப் போராட்டத்தில் மக்களனைவரையும் ஒன்றுபடுத்த ஒரு தேசியமொழி தேவை என்பதும் இரண்டாவது, நாடு விடுதலையடைந்ததும் சுதந்திர நாட்டு அரசியல் விவகாரத்துக்கு அதுவே பொது மொழியாக வேண்டும் என்பதுமாகும். பொது…
ஹிந்து மதவாதிகளின் பிடியிலிருந்து புத்த கயாவை மீட்கவேண்டும் ஒன்றிய அமைச்சரிடம் தொல்.திருமாவளவன் கோரிக்கை
புதுடில்லி, மார்ச் 22- டில்லியில் ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வாலைச் சந்தித்து மகாபோதி கோயிலை ஹிந்து மதவாதிகளின் பிடியில் இருந்து விடுவித்து புத்த சமூகத்திற்கு திரும்ப ஒப்படைக்க வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: கடந்த 9 மாதங்களாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்ட நாசா விண்வெளி வீராங்கனை இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் டிராகன் விண்கலம் மூலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்திய ஊடகங்கள்…
இனி இவர்கள் இந்தியாவிற்கு வருவார்களா?
ஹோலி என்ற கொடுரமான விழா அன்று ஆக்ராவில் தாஜ்மகாலைப் பார்க்கச்சென்ற சுவீடன் நாட்டுத் இணையரின் மனைவியை மட்டுமே குறிவைத்து முகத்தில் மண்ணை அள்ளிப்போட்டும், பெயிண்டை ஊற்றியும் மிகவும் மனிதாபிமானமற்று நடந்துகொண்டனர். இந்த காணொலி சமூகவலைதளத்தில் பரவி கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். ஆனால்…
ஸநாதனிகள் ஒரு கலவரத்தை எப்படி உருவாக்குகிறார்கள்?
நாக்பூர் கலவரம் உருவாக்க இரண்டு மாதம் திட்டமிட்டு செயல்படுத்திய பாஜக ஹிந்துத்துவ அமைப்பினர். ஜனவரியில் கும்பமேளா குறித்த பரபரப்பு செய்திகள் ஓடிக்கொண்டு இருக்கும்போது கும்பமேளாவில் குளிக்க வராதவர்கள் எல்லாம் ஹிந்து விரோதிகள் என்று செய்தி பரப்புகின்றனர். அதே நேரத்தில் ஹிந்துத்துவாதிகள் அவுரங்கசீப்…
