செங்கை மறைமலைநகரில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு தமிழர் தலைவர் தலைமையில் முதலமைச்சர் நிறைவுரையாற்றினார்
மறைமலைநகர், அக். 5- செங்கை மறைமலைநகரில் நேற்று (4.10.2025) சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவுரையாற்றினார். கருத்தரங்கம் மாநாட்டில் பிற்பகல் 2 மணியளவில் “ஆர்.எஸ்.எஸ்.…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு மாட்சிகள்! (மறைமலைநகர் – 4.10.2025)
‘‘உலகத் தலைவர் வாழ்க்கை வரலாறு’’ (தொகுதி - 12) நூலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு மேடையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, ஜப்பான் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் ரா.செந்தில்குமார்…
மறைமலைநகர், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
* வீர வணக்கம்! வீர வணக்கம்! சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீர வணக்கம்!! * ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திடக் காலக் கெடு அவசியம் தேவை! * கிரீமிலேயர் ஒழிக்கப்பட வேண்டும்! தனியார்த் துறையிலும் இடஒதுக்கீடு தேவை! * ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும்!…
இந்திய நிறுவனங்கள் குறித்து ராகுல் பெருமை
புதுடில்லி, அக்.4 இருசக்கர வாகன உற்பத்தியாளர்களான பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் கொலம்பியாவில் சிறப்பாக செயல்படுவதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தென் அமெரிக்காவில் நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொலம்பியாவில் இஅய்ஏ…
பெரியார் திடலுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பின்னணியில் இருப்பது யார்?
சென்னை பெரியார் திடலில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு வந்த தொலைப்பேசி மிரட்டலைத் தொடர்ந்து இன்று (04.10.2025) அதிகாலை 1 மணியளவில், சென்னை காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு காவல்படையினர் பெரியார் திடலில் சோதனை மேற்கொண்டனர். சோதனைக்குப் பின்னர், அது வெறும் புரளி…
பீகார் அரசியல் களத்தில் பரபரப்பு ஆளும் நிதிஷ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர்ஜேடி கட்சியில் இணைந்தார்!
பாட்னா, அக்.4 பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் அய்க்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சஞ்சீவ் குமார், எதிர்க் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத் தில் (ஆர்ஜேடி) இணைந் துள்ளார். ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்…
ஆர்.எஸ்.எஸ். மிரட்டலில் பிரதமர்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்காத – இந்திய தேசியக் கொடியை ஏற்காத – ஜனநாயகம் என்ற சொல்லை ஏற்காத – அரசமைப்புச் சட்ட விழுமியங்களை ஏற்காத – மூன்று முறை இந்திய நாட்டில் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவைக்…
‘‘பேராசைக்காரனடா பார்ப்பான்!’’
‘பேராசைக்காரனடா பார்ப்பான்!’ என்ற சொல் அறிஞர் அண்ணா தீட்டிய ‘ஆரிய மாயை’ என்ற நூலில் காணப்படும் அரிய சொல்லாடல் ஆகும். ஏதோ குறைகூற வேண்டும், இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதல்ல இந்த வாசகம்! இந்தச் சொல்லைப் பார்ப்பனப் – பாரதியாரும்கூட…
