புதுடில்லி, மே 30 மேற்கு ஆசிய மோதல் காரணமாக எரிவாயு உருளை (எல்பிஜி கேஸ்) விநியோகத்தில் சில தடைகள் ஏற்பட்டு வருவதாக பரவலாக தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் குறைந்த பட்சம் 30 நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் எரிவாயு உருளைகள் சேமிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும் என அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், மேற்கு ஆசியா போரினால் இந்தியா உட்பட உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்தது.
எனவே குறைந்தபட்சம் 30 நாட் களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எரிவாயு சேமிப்பு (எல்பிஜி கேஸ்)திறனை அதிகரிப்பதற்கான திட்டங்களை தயாரிக்கும் படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிமிடெட் நிறுவனங்களை அரசு கேட்டு கொண்டுள்ளது என்றார்.
