மருந்து வணிகர்களின் கோரிக்கைக்கு அரசு நிரந்தரத் தீர்வு காணாவிட்டால் காலவரையற்ற கடையடைப்பு வணிகர்கள் சங்கம் எச்சரிக்கை

2 Min Read

சென்னை, மே 21- இணையவழி மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 40,000 மருந்தகங்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் மருந்துகளை வாங்க சில கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேள அழைப்பின் பேரில் இந்த ஒரு நாள் அடையாளக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:

மருத்துவர்களின் முறையான பரிந்துரைச் சீட்டுகள்இன்றி ஆன் லைனில் மருந்துகள் விற்கப்படுவது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத் தலாக மாறியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக மருந்துச் சீட்டுகளை உருவாக்கி, அதன் மூலம் வலி நிவாரணிகள் மற்றும் தூக்க மாத்திரைகள் ஆன்லைனில் எளிதாகப் பெறப்படுகின்றன. இது இளைஞர்களைப் போதைப்பக்கத்திற்கு ஈர்க்கிறது.

புற்றுநோய், இதய நோய் போன்ற தீவிர பாதிப்புகளுக்கான உயிர் காக்கும் மருந்துகளில் கூட இணையவழியில் தரமற்ற மற்றும் போலி தயாரிப்புகள் பரவத் தொடங்கியுள்ளன.

இந்த 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற் படாமல் தடுக்க தமிழக அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

முதலமைச்சரின் மருந்தகங்கள், கூட்டுறவு மருந்தகங்கள் மற்றும் பிரதமரின் ‘ஜன அவுஷதி’ மையங்கள் வழக்கம் போல் இயங்கின. தடையற்ற மருந்து விநியோகத்தை உறுதி செய்ய மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.

மருந்து தட்டுப்பாடு ஏற்படுகிறதா என்பதைக் கண்காணிக்க 69 மருந்து ஆய்வாளர்கள் தீவிரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஒட்டியுள்ள மருந்தகங்கள் மற்றும் பெரிய மருத்துவமனைச் சங்கிலித் தொடர் மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கியதால், அவசரத் தேவைகளுக் கான மருந்து விநியோகத்தில் பெரும் முடக்கம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், வணிகர்களின் கோரிக்கைக்கு அரசு நிரந்தரத் தீர்வு காணாவிட்டால், அடுத்தகட்டமாகக் காலவரையற்ற கடை யடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என வணிகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *