நீட் மறுதேர்வைக் கணினி முறையில் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

புதுடில்லி, மே 20- மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நீட் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

ராட்டிரிய ஜனதா தள  நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகர் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

கணினி வழித் தேர்வு

வினாத்தாள் கசிவு போன்ற முறை கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இனிவரும் நீட் தேர்வுகளை கணினி முறையில்நடத்த வேண்டும். குறிப்பாக, ஜூன் 21 அன்று நடக்கவிருக்கும் இளநிலை நீட் மறுதேர்வை கணினி வழியிலேயே நடத்த உத்தரவிட வேண்டும்.

புதிய தேர்வு ஆணையம்

தற்போது தேர்வுகளை நடத்தி வரும் தேசியத் தேர்வுகள் முகமையை கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக மிகவும் பாதுகாப்பான கட்டமைப் புடன் கூடிய “தேசிய தேர்வுகள் ஆணையம்” என்ற புதிய அமைப்பை உருவாக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மறுதேர்வுக்கான தேதிகள் நெருங்கி வரும் வேளையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள இந்த மனு மருத்துவக் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *