டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு – ஒரே வாரத்தில் இரண்டாவது முறை! பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற பிரதமர் மோடி. நார்வேயில் நடைபெற்ற இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவருக்கும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீட் வினாத்தாள் கசிவு: தேசிய தேர்வு முகமை அலுவலக ஊழியர்களிடம் சி.பி.அய். விசாரணை; வாக்குமூலங்களை பதிவு செய்தது.
தி இந்து:
* தனது ஜோதிட அலுவலகத்தில் அரசு அதிகாரிகளை சந்தித்தது சமூக வலைத்தளங்களில் சர்ச்சை. ஜோதிட ஆபீசுக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தி போட்டோ பதிவிட்டு கெத்து. ரீல்ஸ் போட்டு சீட்டு வாங்கியவர்; தவெக பெண் எம்எல்ஏவுக்கு ராஜகம்பீர ‘சோபா’; பிளாஸ்டிக் சேரில் அமர வைக்கப்பட்ட அரசு அதிகாரிகள்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘டெல்லியில் பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்படும்’: மேற்கு வங்கத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தா தாக்குதலை தீவிரப்படுத்தினார்.
– குடந்தை கருணா
