இந்தியாவைப் பதம் பார்க்கும் கடும் வெப்ப அலை முக்கிய எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு அறிவுரைகள்!

1 Min Read

புதுடில்லி, ஏப்.26 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் அதன் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், கடும் வெப்ப அலை (Heatwave) வீச வாய்ப்புள்ளதாக ஒன்றிய அரசு மற்றும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமேற்கு, மத்திய மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 5°C வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள்

வானிலை அறிக்கையின்படி, குறிப்பாக பஞ்சாப், அரியானா, டில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் விதாபா ஆகிய பகுதிகளில் கடும் வெப்ப அலை வீசக்கூடும். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வெப்பத்துடன் கூடிய ஈரப்பதமான சூழல் நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஒன்றிய சுகாதார அமைச்சகம் மற்றும் வானிலை ஆய்வு மய்யம் பின்வரும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன:

தவிர்ப்பு: குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்வது நல்லது. மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியே செல்லும்போது குடை, தொப்பி அல்லது கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மயக்கம் அல்லது அதீத உடல் சோர்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

பாதிப்புகளைக் குறைக்க மாநில அரசுகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் வானிலை நிலவரங் களைத் தொடர்ந்து கவனித்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *