‘தொகுதி மறுவரையறை மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும்’ முதலமைச்சர் பினராயி விஜயன்!

திருவனந்தபுரம், ஏப்.16- ‘தொகுதி மறுவரையறை மசோதா 2026’ உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ளப் பதிவில்,

“மக்களவையில் மாநிலங்களின் தற்போதைய விகிதாசாரப் பங்கைக் கணக்கில் கொள்ளாமல், தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத் தொடர ஒன்றிய அரசு முனைப்புடன் இருப்பது, தொகுதி மறுவரையறை மசோதா 2026இன் வரைவு அறிக் கையை பார்க்கும்போது தெரிகிறது.

இத்தகைய நடவடிக்கை மிகுந்த அநீதியானது. ஏனெனில், 1976-ஆம் ஆண்டின் தேசிய மக்கள் தொகைக் கொள்கையை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுத்திய கேரளம் உள்ளிட்ட மாநிலங்களை இது தண்டிப்பதாக அமையும்.

மறுபுறம், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பின்தங்கிய மாநிலங்கள், தங்கள் மெத்தனமான செயல்பாட்டிற்காக (கூடுதல் தொகுதிகள் மூலம்) வெகு மதி பெறுவது போல இது அமையும்.

கூட்டாட்சித் தத்துவம் நமது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு. மக்களாட்சியில், பிரதிநிதித்துவத்திற்கான அடிப் படை நோக்கம் வெறும் எண் ணிக்கையாக (மக்கள் தொகை) மட்டும் இருக்க முடியாது. முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் உணர்வுகளையும், குறிப்பாக மாநிலங் களின் உணர்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு அணுகு முறையைக் கையாள வேண்டும்.

இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துடனான அணுகுமுறை என்பது மிகவும் அவசியமானது. அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட உள்ள ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் தற்போதைய முயற்சியானது, நமது அரசியலமைப்பு உருவாக்கத்தின் அடிப்படையாக இருந்த ‘ஒருமித்த கருத்து’ என்னும் உணர்வை சந்தேகத்திற்கு இடமின்றி சிதைத்துவிடும்.

மகளிர் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துகிறோம் என்ற போர் வையில், தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்தை அவசரகதியாக முன்னெடுப்பது என்பது, இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கும் உண்மையான நோக்கங்களை மறைப்பதற்கான ஒரு தந்திரமே அன்றி வேறல்ல.

நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் செயல்முறைகள் இன்னும் நிறைவடையாத நிலையில் இந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டிருப் பது, இதன் பின்னணியில் உள்ள அர சியல் கணக்குகள் குறித்து நியாயமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

போதுமான விவாதங்கள் இன்றி கொண்டுவரப்படவுள்ள தற்போதைய ‘தொகுதி மறுவரையறை மசோதா’ உடனடியாகக் கை விடப்பட வேண்டும். அதே நேரத் தில், நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை, தொகுதி மறு வரையறை அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் எவ் விதத் தொடர்பும் படுத்தாமல், உடனடியாகச் செயல்படுத்த முடியும் மற்றும் செயல்படுத்தவும் வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *