ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளில் வரலாறு காணாத ஊழல் முறைகேடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
புதுடில்லி, ஜூன் 24- மத்தியத் துவப்பட்ட அகில இந்திய தேர்வுகளில் நடைபெற்றுள்ள ஊழல்களுக்குப் பொறுப் பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், மாநிலங்களே தங்களுக்கான பிரத்யேக நடைமுறைகள் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்வதற்கு ஒன்றிய அரசு…
கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15 அனைத்துப் பள்ளிகளிலும் விழா எடுக்க பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!
சென்னை, ஜூன் 24- காமராசர் பிறந்தநாள் விழாவை கல்வித்துறை அலுவலகங்கள், பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு…
கல்லூரி – பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை: யுஜிசி கூறுகிறது
சென்னை, ஜூன் 24- நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடி படிப்புகளுக்கு ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடைமுறை குறித்து ஏற்கெனவே பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.)தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது அதற்கு அனுமதி வழங்கி, அதற்கான அறிவிப்பை…
நிற்காமல் தொடரும் கைது தமிழ்நாடு மீனவர் நலனில் அக்கறை காட்டாத ஒன்றிய அரசைக் கண்டித்து வேலை நிறுத்தம்!
ராமேஸ்வரம், ஜூன் 24- மீன் பிடித் தடைக்காலம் முடிந்து ஒரே வாரத்தில் தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்கள் சிறைப் பிடிப்பை கண்டித்தும், இலங்கையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நட…
சென்னை தீவுத்திடலில் ரூ.104 கோடியில் நிரந்தர கண்காட்சிக்கூடம்
சென்னை, ஜூன் 24- சென்னை தீவுத்திடலில் நிரந்தர கண்காட்சிக்கூடம் அமைக்கப் பட உள்ளது. இதற்கான நட வடிக்கைகளை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய நகரமாக சென்னை திகழ்கிறது. இங்கு உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டு…
இரு சக்கர வாகன பிரச்சார நோக்கம் – திட்டமிடல் ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல்
ஆவடி, ஜூன் 24- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 23-06-2024 மாலை 05-30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்புச் செல்வி கடவுள் மறுப்பு கூற மாவட்ட செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் மாவட்ட…
சேலத்தில் ஜூலை 15ஆம் தேதி சங்கமம் நீட்டை எதிர்த்து இரு சக்கர வாகன பிரச்சாரம் குறித்து சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
சேலம், ஜூன் 24- சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி அவர்களின் "பெரியார் இல்ல"த்தில் 23.6.2024 ஞாயிறு காலை 11:30 மணிக்கு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அ.ச. இளவழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.…
தனியார் கிடங்கில் 1500 லிட்டர் மெத்தனால் பறிமுதல் : நான்கு பேர் கைது
திருவள்ளூர், ஜூன் 24- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்பனையைத் தடுப்பதற்காக மதுவிலக்கு காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார்…
‘நீட்’ தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணையை சி.பி.அய். தொடங்கி உள்ளதாம்
புதுடில்லி, ஜூன் 24 நீட் நுழைவுத் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக சிபிஅய் விசாரணை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, விசாரணையை சிபிஅய் தொடங்கியது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடுமுழுவதும் கடந்த…
இதோ ஒரு நல்ல ‘‘தன் வரலாறு’’ ; படிப்போம் வாருங்கள்! (2)
‘ஒரு வரலாற்று ஆசிரியரின் வரலாறு’ என்ற அடக்கமும் ஆழமும் அமைந்த தன் வரலாற்றை, ஒப்பனை சிறிதுமிலா உண்மைகளின் உலாவாக அமைத்துள்ளார் – புதினம் போன்ற விறுவிறுப்பு வேக நிகழ்ச்சிகளின் தொகுப்பாகத்திகழும் இந்த அருமையான நூல்! 415 பக்கங்களில் சரடுகள் இல்லா சரித்திரமாகவே…
நாளாந்தா பல்கலைக் கழகத்தில் புதிய கட்டடம் கட்ட வாஸ்து நிபுணரா?
தொலைக்காட்சியில் வாஸ்து சாஸ்திரம் கூறிக் கொண்டு இருக்கும் நபர் தான் – உலகப்புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்கள் கட்ட வாஸ்து சாஸ்திர ஆலோசனைகளைக் கூறினாராம். பீகார் மாநிலம் பாட்னா அருகே நாளந்தா மாவட்டத்தில் உள்ள நகரம் ராஜ்கிரி. இங்கு அமைந்துள்ள…
சமூகம் மாறினால் – அரசியல் மாறும்
அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்புப் பெற்ற பிள்ளைகளே தவிர, தனித்தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ - எப்படி உடைத்தெ றிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். ‘குடிஅரசு’ 8.8.1937
