ஆயுள் மருத்துவக் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி வரியை விலக்க வேண்டும்! எல்.அய்.சி. காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
சென்னை, ஆக.26- காப்பீட்டுத் தொகை பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை முழுமை யாக ரத்து செய்ய வேண்டுமென சேலம் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. 24.8.2024 அன்று எல்.அய்.சி. காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் சேலம்…
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!
சென்னை, ஆக.26- 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2436 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 72 மில்லியன் கன அடியாக உள்ளது.…
கட்டுப்பாட்டுக்குள் வந்தது! சென்னையில் விபத்துகள் குறைந்தன
சென்னை, ஆக.26- சென்னை போக்குவரத்து காவல்துறையினர் ‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ என்ற பெயரில் மேற்கொண்ட தொடர் விழிப்புணர்வு காரணமாக, விபத்துகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 6 நாட்கள் எந்த விபத்தும் நிகழாமல் ‘ஜீரோ உயிரிழப்பு’ நாட்களாக அமைந்து சாதனை படைக் கப்பட்டுள்ளது.…
தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிச் சுமை குறைப்பு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
சென்னை, ஆக.26- தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளுக்கு தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை பிறப் பித்துள்ளது. அதாவது ‘எமிஸ்’ வலை தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆசிரி யர்களுக்கு வழங்கக்கூடாது என பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக உத்தர…
தமிழ்நாட்டில் வரும் 30ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் தகவல்!
சென்னை, ஆக.26- தமிழ்நாட்டில் வரும் 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று (26.8.2024) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு…
புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அமைச்சர் முத்துசாமி பேட்டி
கோவை, ஆக.26- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து…
சென்னை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் 411 பேருக்கு பணி நியமன ஆணை – அமைச்சர் உதயநிதி வழங்கினார்
சென்னை, ஆக.26- சென்னை மாகராட்சி சார்பில் கருணை அடிப்படையில் 411 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி நேற்று (25.8.2024) வழங்கினார். சென்னை மாநக ராட்சி சார்பில், மெரினா கடற்கரையை பொது மக்கள் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக…
இயற்கையின் எதிர் வினை தான் வயநாடு நிலச்சரிவு கேரள உயர்நீதிமன்றம் கருத்து
திருவனந்தபுரம், ஆக.25 கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்தனர். கேரளாவில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால் இத்தகைய பேரிடர்கள் ஏற்படுகின்றன என்றும், பேரிடர்களிலிருந்து மக்களைப்…
கொள்கை வீரர் சு. இளங்கோவன் மறைந்தாரே!
திருச்சி மாவட்ட திராவிடர் கழக மேனாள் இளைஞர் அணி தலைவரும், திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் அவர்களின் மைத்துனருமான கொள்கை வீரர் மானமிகு சு. இளங்கோவன் (வயது65) இன்று (25.8.2024)…
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் வெளியீடு
புதுடில்லி, ஆக.25 பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்றில் இடஒதுக்கீடு பெற்றவா்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தோ்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டைச் சோ்ந்த…
