ஆசிரியரின் பெரியாரியல் பாடம்- செந்துறை மதியழகன்
தந்தை பெரியார் அவர்களின் தத்துவத்தை - தர்க்கரீதியான வாதத்தை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள். அய்யா அவர்கள் சொல்லாததை - எழுதாததை எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் போகிற போக்கில், தந்தை பெரியாரை களங்கப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு. தங்கள் மேதாவித்தனத்தை காட்ட முயல்வது அவர்களின்…
சாமியார் மண்ணும் பெரியார் மண்ணும்!
உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சன்யாசம் என்ற பெயரில் சிறுமிகளை தேவ தாசியாக விட்டுவருவது தொடர்பாக செய்திகள் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. இதில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியது என்னவென்றால் இன்று வரை மாநில அரசோ, இதர மகளிர் அமைப்புகளோ இவ்விவகாரம்…
மோசடிக்காரர்கள்
மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவு தான் உயர்நிலையிலிருந்தாலும் சரி அது பித்தலாட்டம், மோசடி வார்த்தை என்பதை மனத்தில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். ('விடுதலை' 20.5.1948)
கும்பமேளா என்ற பெயரில் விபரீதம்!
அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) கும்பமேளா துவங்கி விட்டது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்தும் அலகாபாத் செல்லும் விமானங்களின் கண்ணாடி ஜன்னல்களில் ராமாயண காட்சிகளை ஒட்டி வைத்துள்ளனர். பொதுவாக விமானங்களின் ஜன்னல் கண்ணாடி களில் எந்த ஒரு பொருளையும் ஒட்டவோ அல்லது இணைக்கவோ கூடாது;…
நடைபாதையில் வாடும் எய்ம்ஸ் நோயாளிகள்; உணர்ச்சியின்றி இருக்கும் ஒன்றிய, டில்லி அரசுகள்! ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜன.18 தலைநகர் டில்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளியே புறநோயாளிகள் தங்கி யிருக்கும் பகுதியை காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பார்வையிட்டார். அங்குள்ள நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.…
எங்கே சொர்க்கம்?
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதிசையை முன்னிட்டு கடந்த 10.1.2025 அன்று காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 19ஆம் தேதி வரை இது நீடிக்கிறது. இதற்காக பக்தர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக ஏழு மய்யங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.…
ஜன. 31 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது
புதுடில்லி, ஜன.18 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 இல் தொடங்கவுள்ளது. 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட், பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இரு கட்டங்களாக... மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் நேற்று (17.1.2025) வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி,…
தி.மு.க. அரசின் 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு சட்டத்தின் சாதனை! அருந்ததியின சமூகத்தினர் வாழ்வில் மறுமலர்ச்சி!
சென்னை, ஜன. 18– தி.மு.க. அரசின் 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு சட்டம் அருந்ததியினர் சமூகத்தினரின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக, ‘தி இந்து’ ஆங்கில நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீடு 2009 ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தந்தை பெரியார் - பாவலரேறு பெருஞ்சித்திரனார் இருவரின் கொள்கைப் பயணம் எவ்வாறு இருந்தது? - இரா.சு. மணி, காட்பாடி பதில் 1: இருவரும் இறுதிவரை ஒரே இயக்கப் பாதையில் பயணித்தவர்கள். பாதைகள் சற்று அவ்வப்போது மாறியிருக்கலாம். எதிர்நீச்சலில் சளைக்காதவர்கள்.…
வெட்கமாக இல்லையா?
ஆரிய இன பாசம் கொண்ட பாரதி தமிழர்களுக்கு முப்பாட்டானாம் - அடப்பாவி உனக்கு வேற யாருமே கிடைக்கலையா...... ஆரியருக்கு தாசர் மகன் சூத்திரன் என்பதை நிறுவுகிறார் சீமான்.. அதுவும் தமிழர்கள் சூத்திரன் என்பதை.... “அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முற்றே உலகு”…
