டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப் பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக போராட்டம்: டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி முற்றுகை.
* நம்முடைய தயவோடு நடைபெறும் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதி எடுப்போம்: அதிமுகவினர் திமுகவில் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.
* நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு. சென்னையில் கேஸ் சிலிண்டர் ரூ.957.50க்கும் டெல்லியில் கேஸ் சிலிண்டர் ரூ.942க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 மாதத்தில் 2வது முறையாக வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு முன்னதாக, பாஜகவுடன் சிபிஅய்-எம் கட்சி ‘ஒப்பந்தம்’ என தேர்தல் பரப்புரையில் ராகுல் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்குமாறு காங்கிரஸிடம் சிபிஅய் (எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம். இந்தக் கடிதத்தின் பிரதிகள் மற்ற இந்தியா கூட்டமைப்புக் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டன.
* ஓபிசி மாணவர்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை மராத்தா மாணவர்களுக்கும் விரிவுபடுத்தும் அரசாணையை (GR) மகாராஷ்டிரா அரசின் நடவடிக்கையால் ஓபிசி தலைவர்கள் அதிருப்தி.
தி டெலிகிராப்:
* சி.பி.எஸ்.இ.யின் மதிப்பெண் ஆய்வு முறை தொடர் பான சர்ச்சை: ‘பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வருகின்றன’; அமைச்சர் பிரதான் பதவியில் நீடிப்பது ‘அதிகாரத்தின் மீதான பற்றையே’ காட்டுகிறது என்று காங்கிரஸ் விமர்சனம்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்தியாவில் 2020-க்குப் பிறகு மருத்துவ கவனிப்பு இன்றி நிகழும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, கிட்டத்தட்ட 50%-அய் எட்டியுள்ளது. இறப்பின் போது எந்த மருத்துவ உதவியும் பெறாதவர்கள் அல்லது பயிற்சி பெறாத ஒருவரால் மட்டுமே கவனிக்கப்பட்டவர்கள் இந்தப் பிரிவில் அடங்குவர். நடைமுறையில், இது பெரும்பாலும் வீட்டில் அல்லது வெளியில் முறையான மருத்துவ சிகிச்சையில் இறப்புகளை குறிக்கிறது,
– குடந்தை கருணா
