புதுடில்லி, மே 25 – ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடெய் அண்மையில் மென்பொருள் வேலைவாய்ப்புகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்திருந்த நிலையில், மைக்ரோசாஃப்ட் ஏஅய் (Microsoft AI) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி முஸ்தபா சுலைமானும் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி குறித்து மிக முக்கியமான எச்ச ரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அலுவலகப் பணிகளில்
மனிதர்களுக்கு நிகரான ஏஅய்
மனிதர்களுக்கு நிகரான ஏஅய்
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் முஸ்தபா சுலைமான் பேசியதாவது: அடுத்த 18 மாதங்களுக்குள், அதாவது
2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள், பல வகையான பொதுவான அலுவலகப் பணிகளை மனிதர்களுக்கு நிகரான துல்லியத்துடன் செய்து முடிக்கும் திறனை ஏஅய் தொழில் நுட்பம் எட்டிவிடும்.
“நாம் தற்போது பயன்படுத்தும் ஏஅய் கருவிகள் வெறும் ஆரம்பக் கட்டமே. அடுத்த ஒன்றரை ஆண்டு களில் வரவிருக்கும் அடுத்த தலை முறை ஏஅய் மாதிரிகள், அலுவல கங்களில் மனிதர்கள் செய்யும் தினசரிப் பணிகளை மிக எளிதாக, குறைந்த செலவில் மற்றும் அதி வேகமாகச் செய்து முடிக்கும்” இவ்வாறு அவர் பேசினார்.
பாதிக்கப்படும்
முக்கியத் துறைகள்
முக்கியத் துறைகள்
இந்த ஏஅய் தொழில்நுட்பப் புரட்சி யால் வழக்கமான தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமன்றி, பல்வேறு அலுவலகம் சார்ந்த வேலைவாய்ப்புகளும் கடுமை யான மாற்றங்களைச் சந்திக்க நேரிடும் என்று சுலைமான் எச்ச ரித்துள்ளார். குறிப்பாகப் பின்வரும் துறைகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்:
வழக்குரைஞர்கள் : சட்ட ஆவ ணங்களை ஆய்வு செய்தல், முந்தைய தீர்ப்புகளைத் திரட்டுதல் மற்றும் ஒப்பந்தங் களை உரு வாக்குதல் போன்ற பணிகள்.
கணக்காளர்கள் : நிதிநிலை அறிக்கை களைத் தயாரித்தல், வரி கணக்கீடுகள் மற்றும் தணிக்கை (Auditing) சார்ந்த பணிகள்.
சந்தைப்படுத்துபவர்கள் : விளம்பர உத்திகளை உருவாக்குதல், நுகர்வோர் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல் மற்றும் உள்ளட க்கங்களை (Content) உருவாக்குதல்.
மேலாளர்கள் : திட்டங்களை ஒருங்கிணைத்தல், பணியாளர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்தல் மற்றும் நிர்வாக முடிவுகளை எடுத்தல்.
மாற்றத்திற்குத் தயாராக வேண்டிய கட்டாயம்
ஏஅய் தொழில்நுட்பத்தின் இந்த அசுர வேக ஊடுருவல் காரணமாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைக்க ஏஅய் கருவிக ளை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கும். இதனால் லட்சக்கணக்கான அலுவலக ஊழியர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகலாம் அல்லது அவர் களின் பணித்தன்மை முற்றிலும் மாறலாம் என்று வல்லுநர் கருதுகின்றனர்.
