தேர்தல் ஆணையத்தின் ‘மாயாஜாலம்!’ முழு கிராமமும் ஒரே வீட்டில் வசிக்கிறதா..? ராகுல் காந்தி குற்றச்சாட்டு

1 Min Read

பாட்னா, ஆக.30– சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த சிறப்புத் திருத்தத்தை கண்டித்தும், தேர்தல் ஆணையம் வாக்கு திருடுவதாக குற்றம் சாட்டியும் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி, பீகாரில் வாக்காளர் உரிமைப் பயணம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை நேற்று (29.8.2025) அவர் வெளியிட்டார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் தள பதிவை தனது சமூக ஊடக தளத்தில் அவர் பகிர்ந்து இருந்தார். அதில், ‘தேர்தல் ஆணையத்தின் மாயாஜாலத்தை பாருங்கள். ஒரு முழு கிராமத்தையும் ஒரே வீட்டில் குடியேற்றி இருக்கிறது’ என குறிப்பிட்டு இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் அந்த வலைத்தளப் பதிவில், ‘கயா மாவட்டத்தின் பராசட்டி தொகுதிக்கு உட்பட்ட நிடானி கிராமத்தை சேர்ந்த அனைத்து 947 வாக்காளர்களும் வீட்டு எண் 6-இல் வசிப்பதாக காட்டப்பட்டு உள்ளது’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அதில், ‘இது வெறும் ஒரு கிராமத்தை பற்றியது. மாநில மற்றும் தேசிய அளவில் நடக்கும் முறைகேடுகளின் அளவை நாம் கற்பனை செய்து பார்க்க மட்டுமே முடியும்’ என்றும் கூறப்பட்டு இருந்தது.

ராகுல் காந்தியின் இந்த வலைத்தள பதிவு மற்றும் குற்றச்சாட்டு அரசியல் தளத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேநேரம் ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்து இருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறுகையில், ‘அசல் தொடர் எண்கள் இல்லாத கிராமங்கள் அல்லது குடிசைப் பகுதிகளில் கற்பனையான வீட்டு எண் வழங்கப்படுகிறது. வாக்காளர்களைச் சேர்க்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக இது செய்யப்படுகிறது’ என குறிப்பிட்டு இருந்தார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *