புவனேஸ்வர், மார்ச் 21 ஒடிசாவில் கோடை வெய்யிலை தவிர்க்க பள்ளி நேரத்தில் மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல், மே மாதத்தில் ஏற்படும் வெப்ப அலை களில் இருந்து பள்ளிக் குழந்தைகளைக் காப்பதற்காக தமிழ்நாட்டில் மே மாதம் முழுவதும் விடுமுறை விடப்படுவது வழக்கம். அதேபோல, மார்ச் மாதத் தொடக்கத்திலேயே வெய் யிலின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
இந்த நிலையில், ஒடிசா வில் வெப்ப அலைகளில் மாணவர்களைக் காப்பதற் காக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி நேரம் காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மட்டும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும் வகை யில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர் தேவையை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில், பள்ளி வளாகத்திற்குள் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை வைக்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதை உறுதி செய்ய அனைத்து பெற்றோர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது போதுமான அளவு விளம்பரப்படுத்தப்பட வேண்டும். பள்ளி நேரங்களில், வெப்ப அலை குறித்து முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை மாணவர் களுக்கு வழங்க வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.வானிலை நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து பள்ளி நேரத்தை மாற்றியமைக்கவும் பள்ளிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை இந்த ஆண்டு கோடை காலம் மிக உக்கிரமாக இருக்கும்
அதிர்ச்சி கொடுத்த வானிலை மய்யம்
சென்னை, மார்ச் 21 கோடையில் வெப்பம் அதிக மாக இருக்கும் சூழலில், இந்த ஆண்டு சென்னையில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்த பட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் சவுகரியம் ஏற்படலாம்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.
ஏற்ெகனவே வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் இந்த ஆண்டு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.