தெலங்கானாவில் நள்ளிரவில் சாதாரண உடையில் களமிறங்கிய பெண் அய்பிஎஸ் அதிகாரி! தானாக வந்து சிக்கிய 40 காமுகர்கள்!

2 Min Read

அய்தராபாத், மே 8 பெண்களுக்கு எதிரான கேலி, கிண்டல் மற்றும் ஈவ் டீசிங் செயல்களை ஒடுக்க, தெலங்கானா மாநிலம் மல்காஜ்கிரி காவல் ஆணையர் சுமதி அய்பிஎஸ்  மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 5-ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், அய்தராபாத் தில்சுக் நகர் பேருந்து நிலையத்தில் சுமதி அய்பிஎஸ்  சாதாரண உடையில், தனியாக பேருந்துக்காகக் காத்திருக்கும் ஒரு சாதாரணப் பெண் போல ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டார். நள்ளிரவில் ஒரு பெண் தனியாக இருப்பதைப் பார்த்த பல சமூக விரோதிகள், அவர் ஒரு உயர் காவல் அதிகாரி என்பதை அறியாமல்  அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர்:

கேலி மற்றும் கிண்டல்: அவ்வழியாகச் சென்ற வாலிபர்கள் தரக்குறைவான வார்த்தைகளால் கேலி செய்துள்ளனர்.ஆபாசப் பேச்சு: சிலர் மிக மோசமான முறையில் ஆபாசமாகப் பேசியுள்ளனர்.

அங்கிருந்து அவர் தப்பிச் செல்வது போல நடித்தபோது, விடாமல் இருசக்கர வாகனங்களில் அவரைத் துரத்திச் சென்று தொல்லை கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து 3.30 மணி வரை அங்கேயே தங்கியிருந்த அதிகாரி சுமதி, தன்னைத் துன்புறுத் தியவர்களின் அடையாளங்களையும், அங்குள்ளவர்களின் போக்கையும் உன்னிப்பாகக் கவனித்தார். பின்னர், தயார் நிலையில் இருந்த காவல்துறையினரை வரவழைத்து அதிரடி வேட்டையில் இறங்கினார்.

ஒரே இரவில் பெண்களைத் துன்புறுத்திய 40 பேரை காவல்துறை யினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சோதனை குறித்துப் சுமதி கூறியதாவது:

“ஒரு அய்பிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது. பெண்கள் எதற்கும் அஞ்சாமல் தங்களுக்கு நேரும் துன்புறுத்தல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். ஆபத்து நேரங்களில் ‘ஷீ டீம்ஸ்’ (She Teams) மற்றும் ‘100’ ஆகிய எண்களைப் பயன்படுத்தி உதவி கோர வேண்டும். பெண்களைத் துன்புறுத்துவோர் மீது இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் தொடரும்,” என எச்சரித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற துணிச் சலான நடவடிக்கைகளை எடுத்த அதிகாரியைச் சமூக வலைத் தளங்களில் பலரும் பாராட்டி வரு கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *