5,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாடு ராகுல் காந்தி மகிழ்ச்சி!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன.24 தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்பதும், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டதும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் இந்தத் தொன்மை, நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்தப் பெருமையை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்‘ தளத்தில் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு பதில் அளித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

‘‘இந்தியாவின் வளமான பாரம்பரி யம் உலகுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தியதை தமிழ்நாட்டின் சமீபத்திய தொல் பொருள் கண்டுபிடிப்புகள் வெளிப் படுத்துகின்றன. இது இரும்பு யுகத்தில் இந்தியாவின் தொடக்ககால முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டின் பங்களிப்புகள், நாடு முழுவதும் எண்ணற்ற மைல்கற்களுடன் இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் ஒருமைப்பாட்டை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும், சமூ கத்திலும், குரலிலும் செழித்து வள ரும் இந்தியாவின் உணர்வைக் கொண்டா டுவோம்.’’
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *