டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்த காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுலின் ஆய்வு அமைந்துள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. பாஜகவையும் சேர்த்து அம்மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.