டில்லி,ஆக.9- தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளம் தனியார் மயமாகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன.
தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்திற்காக தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப் பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. குலசேகரப்பட்டி னத்தில் ரூ. 986 கோடியில் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின் றன. 2,233 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை ஒன்றிய அரசின் விண்வெளித் துறை மேற்கொண்டு வருகிறது. குலசேகரப் பட்டினத்தில் அமையும் ஏவுதளத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியது.
ராக்கெட் ஏவுதளத்தை தனியாரிடம் வழங்க ஒன்றிய அரசின் இன்-ஸ்பேஸ் நிறு வனம் ஒப்பந்தம் கோரியது. குலசேகரப் பட்டினம் ஏவுதளத்தில் இருந்து சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முடியும். நாட்டின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் தனியாருக்கு வழங்கப்பட இருப்பதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
