நாட்டில் 86,360 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள்: ஒன்றிய அரசு

புதுடில்லி, ஆக. 8 ‘நாடு முழுவதும் தற்போது 86,360 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் இருப்பதாகவும், அனைத்து மருத்துவ பட்டயப் படிப்புகளையும் முதுநிலை டிஎன்பி பட்டப் படிப்புகளாக மாற்றும் திட்டம் எதுவும் தற்போது இல்லை’ என்றும் ஒன்றிய அரசுத் தரப்பில் நாடாளுமன்றத்தில் 7.8.2026 அன்று தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் இது தொடா் பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா பதிலளித்து பேசியதாவது:

நாடு முழுவதும் தற்போது 86,360 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் இருப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதுபோல, தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) அளித்த தகவலின்படி, அனைத்து மருத்துவ பட்டயப் படிப்புகளையும் முதுநிலை டிஎன்பி மருத்துவப் பட்டப் படிப்புகளாக மாற்றும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை.

புதிய முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே வழங்கப்பட்டுவரும் முதுநிலை மருத்துவப் படிப்புகளின் இடங்களை அதிகரிப்பதற்கும் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. முதுநிலை மருத்துவப் படிப்பு வழிகாட்டுதல்கள் 2023 மற்றும் முதுநிலைப் பட்ட குறைந்தபட்ச தரநிலை மற்றும் தேவைகள் 2024 அடிப்படையில் என்எம்சி வழிகாட்டு நடைமுறைகளின் அடிப்படையில் நிபந்தனைகளை நிறைவு செய்யும் கல்லூரிகளுக்கு, அதற்கான அனுமதி வழங்கப்படும்.

முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை அதிகரிக்க தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கல்வித் தரத்தைப் பாதிக்காமல் அனுமதி நடைமுறைகளை எளிதாக்கியது, கூட்டு அங்கீகார திட்டம், முதுநிலைப் படிப்புகளுக்கான அனுமதி கோர மாவட்ட மருத் துவமனைகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட நவடிக்கைகளை தோ்வுகள் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

மேலும், 2025-2026 முதல் 2028-2029 வரையிலான காலகட்டத்தில் கூடுதலாக 5,000 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை உருவாக்கும் நோக்கில், மாநில மற்றும் ஒன்றிய அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு படிப்பை மட்டும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்தி மேம்படுத்துவதற்கான ஒன்றிய அரசின் திட்டத்தின் மூன்றாம் கட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித் துள்ளது. இதில், ஒது முதுநிலை மருத்துவப் படிப்பு இடத்துக்கான செலவு வரம்பு ரூ.1.50 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது என்றார்.

தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் நிர்ணயம் என்பது அந்தந்த மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு கீழ் வருகிறது. அதே நேரம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள 50 சதவீத இடங்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை நிர்ண யிப்பதற்கான வழிகாட்டுதலை என்எம்சி கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்டது. இதை எதிர்த்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *