செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் புதிய பணியாளர் சேர்க்கையை குறைக்கிறது

1 Min Read

டிசிஎஸ் (TCS) நிறுவனம் அறிவிப்பு!

மும்பை, ஜூன் 11- செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேக வளர்ச்சியால், தகவல் தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவானான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் இனி வரும் காலங்களில் பழையபடி அதிக எண்ணிக்கையில் புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கப்போவதில்லை என்று டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் பேசுகையில், வரும் காலங்களில் பல்வேறு பணிகளை மனிதர்களுக்குப் பதிலாக மிகத் துல்லியமாகச் செய்யக்கூடிய அதிநவீன ‘AI ஏஜெண்டுகள்’ (AI Agents) களமிறக்கப்பட்டுச் செயல்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப உலகின் இந்த அத்தியாவசிய மாற்றத்திற்கு ஏற்ப நிறுவனம் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மென்பொருள் துறையில் நிலவி வரும் வேலைவாய்ப்பு அச்சங்கள் குறித்துப் பேசிய அவர், தற்போதைக்கு நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களை நீக்கும் ஆட்குறைப்பு (Layoffs) நடவடிக்கைகள் எதுவும் இருக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனால், அதே வேளையில் வழக்கமாக ஆண்டுதோறும் அய்டி (IT) துறையில் நடத்தப்படும் மெகா கேம்பஸ் நேர்காணல்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கிலான புதிய பணியாளர் சேர்க்கை (Mass Hiring) இனி கணிசமாகக் குறையும். தற்போதுள்ள ஊழியர்களுக்கு புதிய ஏஅய் தொழில்நுட்பங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் சூழலில், இந்தியாவின் முன்னணி அய்டி நிறுவனமான டிசிஎஸ்-இன் இந்த அறிவிப்பு, மென்பொருள் துறைக்குத் தயாராகி வரும் இளம் பட்டதாரிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *