‘‘தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்தவர்!’’

1 Min Read

‘‘தமிழெனும் ஆயுதமேந்தி
இனமானம் உரைத்தவர்!’’
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

சென்னை, ஏப்.29 புரட்சிக்கவி ஞர் பாரதிதாசனின் பிறந்தநாளை யொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நெகிழ்ச்சியான முறையில் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

இனமானம் காத்த கவிஞர்

‘‘தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த புரட்சிக்கவிஞர் புகழ் வாழியவே!’’ எனப் போற்றி யுள்ள முதலமைச்சர், பாரதிதாசனின் கவிதைகள் தமிழினத்தின் உணர்ச்சியைத் தூண்டும் வலிமை கொண்டவை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழின் இனிமை

தமிழின் இனிமையையும், அதே வேளையில் தமிழர்கள் வாழ்வில் உயர்வதற்கான வழிகளையும் தனது தீந்தமிழ்க் கவிதைகளின் வாயிலாக உலகிற்குப் பறைசாற்றியவர் புரட்சிக்கவிஞர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புரட்சிக்கவிஞரி்ன உறுதிமிக்கத் தமிழ் வரிகள், தமிழினத்திற்கு என்றும் ஒரு திண்ணமான ஒளியாக இருந்து நல்வழிப்படுத்தும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

பாரதிதாசனின் தமிழ் உணர் வையும், சமூகச் சீர்திருத்தக் கருத்து களையும் போற்றும் வகையில் முதலமைச்சரின் இந்தப் பதிவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஸ்டாலின் புகழாரம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *