இ.டி.க்கும் – மோடிக்கும் அஞ்சோம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

viduthalai
1 Min Read

புதுக்கோட்டை, மே 25 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று (24.5.2025) நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, “அனைத்துத் துறை அலுவலர்களும் பொது மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருந்து, அரசின் திட்டங்களை மக்களிடையே சென்றடையச் செய்து, அர சுக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும்” என கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய  தாவது:

தமிழ்நாட்டுக்கான நிதி உரிமையைப் பெறுவ தற்காக டில்லியில் நடை பெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இதை அரசியலாக்குவதற்காக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அமலாக்கத் துறை சோதனைக்கு பயந்து முதலமைச்சர் ஸ்டாலின் டில்லி சென்றதாகவும் கூறியுள்ளனர். நாங்கள் இ.டி. (அமலாக்கத் துறை) மட்டுமல்ல, மோடியே வந் தாலும் பயப்பட மாட்டோம். எங்களை மிரட்டி அடிபணிய வைக்க பார்த்தார்கள். மிரட்டி அடி பணிய வைப்பதற்கு திமுக ஒன்றும் அடிமை கட்சி அல்ல.

கலைஞரால் கட்டிக் காக்கப்பட்ட, பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றக் கூடிய சுயமரியாதைக் கட்சி திமுக. தவறு செய்தவர் கள் தான் பயப்பட வேண்டும். நாங்கள் யாருக்கும் அடிபணியவும் வேண் டியதில்லை, பயப்படவும் அவசியமில்லை. எதையும் சட்டப்பூர்வமாக சந்திப்போம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *