மதுரை,பிப்.25- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் பொதுமக்களின் 100 ஆண்டு கால கோரிக்கையாக இருந்த வைகை ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள நிலையூர் கால்வாயில் புதிய ஆற்றுப்பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கின.
ஆண்டுக்கு ஆண்டு மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது சோழவந்தான் பகுதியிலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா நடைபெறுவதும் இந்தத் திருவிழாவை காண பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் முள்ளிப்பள்ளம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக வைகை ஆற்றில் திருவிழா செல்ல வழியில் நிலையூர் கால்வாய் அமைந்துள்ளது.
இந்த கால்வாயில் பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் புதிய பாலம் கட்டி தர கோரிக்கை வைத்தனர்
இதனை நிறைவேற்றும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் துவக்கி வைத்தார்.