சென்னை,ஜூன் 10–- தமிழ்நாடு அரசுப் பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கான 2026-2027ஆம் கல்வியாண்டு பொது இடமாறுதல் கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களின் மாறுதல் விண்ணப் பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதளம் வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாறுதல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து வகை ஆசிரியர்களும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
முக்கிய தளர்வு: பொதுவாக மாறுதலுக்கு விதிக்கப்படும் “தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி நிறைவடைந்திருக்க வேண்டும்” என்ற நிபந்தனை இந்த முறை அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வின் போது பின்வரும் பிரிவினருக்கு முன்னுரிமை (Priority) வழங்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது:
பள்ளிக்கல்வித்துறையில் மாறுதல் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30ஆம் தேதி வெளியிடப்படும்.
கலந்தாய்வு ஜூலை 1 முதல் 24 வரை நடைபெறும். அதேபோல், தொடக்கக் கல்வித்துறையில் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 25ஆம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 16ஆம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
