தமிழ்நாட்டுக்கு ரெட் எச்சரிக்கை – அடுத்து இரு நாள்களுக்கு கனமழை
சென்னை, மே 19- தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று (19.5.2024) முதல் ‘ரெட் அலர்ட்’ எனப் படும் அதி கனமழையும், நாளை (20.5.2024) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழையும் பெய்ய…
அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள்: தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, மே 19 அயலகத் தமிழர் நல வாரியம் மூலம் அயலகத்தில் உள்ள தமிழர் களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை நேற்று (18.5.2024) வெளியிட்ட அறிவிப்பு: வேலைவாய்ப்பு,…
மதுரை அருகே ‘மற்றொரு கீழடி’ 2,500 ஆண்டு பழைமையான சூதுபவள மணி கண்டெடுப்பு அரசு அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைப்பு
மதுரை, மே 19 மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சூலபுரம் கிராமத்தில் கீழடியைப் போல தொல்லியல் பொருட்கள் அதிகளவு கிடைத்து வருகின்றன. சூலபுரத்தில் தனியார் தோட்டத்தில் அண்மையில் பள்ளம் தோண்டியபோது பழைமையான 1,500 சூதுபவளமணிகள் கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்ததில் சுமார்…
மின்சார ஊழியர்களின் உயிர் காக்கும் திட்டம் தமிழ்நாடு அரசின் சிறப்பான ஏற்பாடு
சென்னை, மே 19 மின்சார ஊழியர்களின் பாதுகாப்புக்காக மின்னழுத்தத்தை 100 மீட்டர் முன்பே கணிக்கும் கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வீடுகள், கம்பங்கள், மின்மாற்றிகளில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மின்வாரிய தொழிலாளர்கள் நேரில் சென்று அந்த பிரச்னைக்கு தீர்வு காண்கின்றனர். மின் தொழிலாளர்கள்…
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மே 19 மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி…
இந்திய எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் ஏழு பேர் கைது
தூத்துக்குடி, மே 19 இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 7 இலங்கை மீனவர்களை கடலோரக் காவல் படையினர் படகுடன் கைது செய்தனர். தூத்துக்குடி கடலோர காவல் படையினர் வைபவ் ரோந்து கப்பலில் நேற்று (18.5.2024) காலையில் ரோந்துப்…
உயிர் பலியின் எதிரொலி குற்றால அருவிகளில் முன்கூட்டியே எச்சரிக்கும் சென்சார் வைக்க முடிவு..!
தென்காசி, மே 19 தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவி தமிழ்நாட்டின் சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறை உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. 17.5.2024 அன்று தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.…
திருப்பத்தூர் மாவட்ட கழகம் சார்பில் ‘விடுதலை’க்குச் சந்தா சேர்ப்பு கலந்துரையாடல் கூட்டம்
திருப்பத்தூர், மே 19 திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ‘விடுதலை' நாளிதழுக்கு சந்தா சேர்ப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசனின் தந்தை பெரியார் இல்லத்தில் நேற்று (18.05.2024) மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது. இந்…
150 சந்தாக்கள் வழங்குவது என மன்னார்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மன்னார்குடி, மே 19 ‘விடுதலை' சந்தா 150 வழங்குவது என மன்னார்குடி மாவட்டக் கலந் துரையாடல்கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. கடந்த 17.4.2024 அன்று மாலை 6 மணி அளவில் மன்னார்குடி தந்தை பெரியார் படிப்பகத்தில் மன்னார் குடி மாவட்ட கலந்துரையாடல்…
+2 (சிபிஎஸ்இ) தேர்வில் 500/456 மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி
மதுரை மாவட்ட காப்பாளர் தே.எடிசன் ராஜா பெயரனும் எ.செல்வப்பெரியார் மருத்துவர் இராஜேஸ்வரி ஆகியோரின் செல்வனுமான செ.தேவசன் பெரியார் நடைபெற்ற +2 (சிபிஎஸ்இ) தேர்வில் 456/500 மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற்றார். அவருக்கு பயனாடை புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழர்…
