இந்நாள் – அந்நாள்
கேரளத்தின் முதல் பகுத்தறிவு இதழ் நாராயணகுருவின் கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்க துவங்கப்பட்டது. இதில் நாராயணகுரு கடவுள் மறுப்புக் கொள்கைகளை எழுதியுள்ளார். நாராயண குருவின் முதல் சீடன் துவங்கிய முதல் பகுத்தறிவு நாத்திக இதழ் யுக்திவாதி(கேள்விகேட்பவன்) நாராயண குருவிற்கு பல கடவுள்…
ஜாதி : ஆர்.எஸ்.எஸின் இரட்டை வேடம்!
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் கூறிய கருத்து புயலை எழுப்பியது. ஆர்.எஸ்.எஸ். ஏடான பாஞ்சன்யாவின் சமீபத்திய இதழ் ஜாதி அமைப்பையே நியாயப்படுத்தி எழுதியுள்ளது. ’ஜாதி அமைப்பே இந்திய சமூகத்தினை “ஒருங்கிணைக்கும் காரணி”.…
சுயமரியாதைத் தத்துவம்
உங்கள் பெண்மக்களிடம் 20 வயதிற்குப் பிறகு கேளுங்கள் - திருமணம் செய்து கொள்ள இஷ்டமா? பொதுச்சேவை செய்ய இஷ்டமா? என்று. ‘திருமணத்தில் இஷ்டம்’ என்றால் நல்ல வரனைத் தேடிப் பிடிக்கும் வேலையை அவர்களுக்கே விட்டு விடுங்கள்; வேண்டுமானால் ஆலோசனை மட்டும் கூறுங்கள்.…
குரு – சீடன்!
கோல்வால்கரின் சீடர்! சீடன்:சமஸ்கிருதத்தைத் தவிர்ப்பதால், கலாச்சாரத்தை இழந்து வருகிறோம் என்று ஆளுநர் ஆர்.என்.இரவி பேசியிருக்கிறாரே, குருஜி! குருஜி: கோல்வால்கரின் சீடர் அப்படித்தான் பேசுவார், சீடா!
எச்சரிக்கை!
கிருஷ்ணகிரி அருகே தனி யார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த விவகாரத்தை அடுத்து பள்ளிகளில் அனுமதி இல்லாமல் முகாம்கள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை!
பா.ஜ.க. ஆளும் உத்தராகண்டில் பேருந்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமை
டேராடூன், ஆக.20 உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த 12 ஆம் தேதி பேருந்து மூலம் பயணம் செய்து டில்லி அய்எஸ்பிடி பேருந்து நிலையம் வந்த…
ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்க! ரயில்வே அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஆக.20- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்தி ருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான…
பாலியல் கொடூரன் பூசாரிக்கு 40 ஆண்டுகள் சிறை
திருப்பூர், ஆக.20 திருப்பூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பூசாரிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் கோவில் பூசாரி ஆவார்.…
புதிய தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக திரு.என்.முருகானந்தம் அய்.ஏ.எஸ். அவர்கள், தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதொரு முக்கிய நியமனம் ஆகும்! தமிழ்நாடு அரசின் மூத்த அதிகாரியான திரு.என்.முருகானந்தம் அவர்கள், பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று, மிகத் திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். மிக…
கடைசிச் செய்தி! போராட்டமின்றியே வெற்றி! நேரடி நியமன முறையிலிருந்து பின்வாங்கியது ஒன்றிய அரசு!
தனியார் நிறுவனங்களிலிருந்து இணை செயலாளர், கூடுதல் செயலாளர்களாக ஒன்றிய அரசு அதிகாரிகளை நியமித்துக் கொள்ளலாம் என்று எடுத்த முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. ஒன்றிய அரசின் முந்தைய முடிவை எதிர்த்து வரும் 24 ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்தவிருந்த…
ஒன்றிய அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனத்தால் பா.ஜ.க. கூட்டணியில் பிளவு?
நிதீஷ்குமார் – சிராக் பஸ்வான் எதிர்ப்பு! பாட்னா, ஆக.20 ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) 45 அரசு பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்ப எடுத்த முடிவு தொடர்பாக பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. ஜனதா…
பெண் அன்றும் இன்றும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர் தோழர் நர்மதா தேவி, தான் எழுதிய "பெண் அன்றும் இன்றும்" எனும் ஆய்வு நூலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். (பெரியார் திடல், 19.08.2024)
