இன்னும் எத்தனை உயிர் தேவை? ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு – மாணவர் தற்கொலை
ஜெய்ப்பூர், டிச. 21- ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த சூழலில், சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து…
செய்தியும், சிந்தனையும்
பிஜேபி ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? * ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் தர வேண்டும் என்பதற்காக பட்டியலினத்தைச் சார்ந்த ராம்நாத் கோவிந்த் அவர்களை குடியரசு தலைவராக்கியது பிஜேபி. - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. (பிஜேபி) >> பட்டியலினத்தைச் சேர்ந்த ராம்நாத்தையும்…
திருப்பதி ஏழுமலையான் சக்தியோ சக்தி! லாரி மோதி 4 பேர் பலி
திருப்பதி, டிச.21 ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டம் குடி பண்டா மற்றும் அமரபுரம் பகுதியை சேர்ந்த 14 பக்தர்கள் வாடகை வேனில் திருப்பதிக்கு வந்தனர். ஏழுமலையானை தரிசித்து விட்டு நேற்று (20.12.2024) இரவு வேனில் வீடு திரும்பி சென்று கொண்டு…
நிதி
துறையூர் கழக மாவட்டத் தலைவர் ச.மணிவண்ணன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
நிதி
கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி “விடுதலை வளர்ச்சி” நிதியாக ரூ.10,000–த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். (பெரியார் திடல், 19.12.2024)
நாடாளுமன்ற வளாகத்தில் கைகலப்பு!
‘இந்தியா’ கூட்டணி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்கிய பாஜகவினர்மீது வழக்கு இல்லை புதுடில்லி, டிச.21 நாடாளு மன்றத்தில் அம்பேத்கரை அவ தூறாகப் பேசிய அமித்ஷாவைக் கண்டித்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 19.12.2024 அன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில்…
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினால் நடவடிக்கையாம்! மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா எச்சரிக்கை
புதுடில்லி, டிச. 21 நாடாளுமன்ற வளாகத்தில் ஆா்ப்பாட்டம், போராட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தினால் அவா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தார். தள்ளுமுள்ளு நாடாளுமன்ற வாயிலில் பாஜக-காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19.12.2024 அன்று நடத்திய போராட்டத்தில்…
பா.ஜ.க.விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தமிழ்நாட்டிற்கு உரிய உரிமைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு தரவில்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள்! சென்னை, டிச.21 தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று பா.ஜ.க.விற்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான…
தரமற்ற 90 மருந்துகள் – ஆய்வின்போது கண்டறியப்பட்டது
சென்னை, டிச.21- சளி, வைட்டமின் குறைபாடு, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் ஒன்றிய மற்றும்…
ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னைக்கு 370 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த…
