வாழ்த்துப் பெற்றார்
அறக்கலகம் ஊடகம் சார்பில் “திருப்பரங்குன்றம் Files" எனும் பெயரில், ஆவணப்படம் தயாரித்து வலையொலியில் (YouTube) வெளியிடப் பட்டுள்ளது. அதன் இயக்குநர் தவம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன்: தமிழ்தாசன், ஹரி. (சென்னை, 4.3.2026)
தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்கள் தூவி மரியாதை செய்தார்
புதியதாக கட்சியை துவக்கிய புரட்சி அண்ணா தி.மு.க. நிறுவனத் தலைவர் பெங்களூரு வா.புகழேந்தி, தனது கட்சித் தோழர்களுடன் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்கள் தூவி மரியாதை செய்தார். பெரியார் திடல் தோழர்கள் அவரை வரவேற்று, வாழ்த்துகள் கூறினர். (சென்னை, 5.3.2026)
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: கடவுள்களுக்கு ஓட்டு இல்லை என்பதால் கோயில் சொத்துக் களை மீட்கவில்லையா? – மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி சிந்தனை: உண்மை இவ்வாறு இருக்க, பொதுவாக தேர்தலில் போட்டியிடும் பேர்வழிகள் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது…
இன்று நிதிஷ்குமார், நாளை இ.பி.எஸ். தேஜஸ்வி எச்சரிக்கை
கூட்டணிக் கட்சிகளை ஹைஜாக் செய்து அழிப்பதே, பாஜகவின் வழக்கம் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி விமர்சித்துள்ளார். நிதிஷ்குமாரின் கட்சியை பா.ஜ.க., அபகரித்துவிடும் என தேர்தலுக்கு முன்பே சொன்னேன்; இன்று நடந்துவிட்டது. ஓ.பி.சி. ஒருவரை ரப்பர் ஸ்டாம்ப் முதலமைச்சராக வைத்துக்கொண்டு, ஆர்.எஸ்.எஸ். ஆட்கள்தான்…
அமெரிக்கா – நியூஜெர்சியில் முதலமைச்சர் பிறந்த நாள் சிறப்பு!
தமிழ்நாட்டின் முதலமைச்சர், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா அமெரிக்க மண்ணில் நியூஜெர்சி மாநிலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை தி.மு.க. அயலக அணி கிழக்கு அமைப்பாளர் நியூஜெர்சி பாலா ஏற்பாடு செய்திருந்தார்.…
அன்னை மணியம்மையார் 107ஆவது பிறந்த நாள்
அன்னை மணியம்மையாரின் 107ஆவது பிறந்த நாளான 10.3.2026 அன்று காலை 10 மணி அளவில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்படும். - தலைமை நிலையம், திராவிடர் கழகம்
ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மார்ச் 6 ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கான 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, சென்னைத் தலைமைச் செயலகத்தில் கழகத்…
”பெரியார் உலகம்” நன்கொடை
பகுத்தறிவாளர் கழக வடசென்னை மாவட்ட அமைப்பாளர் பா.இராமு - நந்தினி ஆகியோர் பேரன் பிறந்து, முதன்முதலில் பெரியார் திடலுக்கு அழைத்து வந்திருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, ”பெரியார் உலகம்” நன்கொடையாக ரூ.10,000/- வழங்கினர். உடன்: பா.இராமு…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
பூவிருந்தவல்லி மருத்துவர் சரோஜா அவர்களின் சகோதரர் நடராஜன், ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூ.1 லட்சம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 5.3.2026)
பெரியார் நினைவிடம் மற்றும் அன்னை மணியம்மையார் நினைவிடம் ஆகிய இடங்களில் மலர் தூவி மரியாதை செய்தனர்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் நடைபெறவிருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றம் மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களாக தி.மு.க. தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டு, மனு தாக்கல் செய்த பின்னர், சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து வேட்பாளர்கள்…
