பெரியகுளம் கீழ வடகரையில் தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடம் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அ.மோகன் தலைமையில் தேனி மாவட்ட கழக செயலாளர் பூ.மணிகண்டன் வரவேற்புரை ஆற்ற, கழக கம்பம் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மாநில அமைப்பாளர் கா சிவா மாவட்ட அமைப்பாளர் சே கண்ணன் முன்னிலை வகிக்க பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ மோகன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் பகுத்தறிவாளர் கழக பொருளாளர் கருப்பண்ணன், கம்பம் மாவட்ட காப்பாளர் கருப்பு சட்டை நடராஜன், பெரியகுளம் பகுத்தறிவாளர் கழக தலைவர் இப்ராஹிம் பாஷா, நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர் காமராஜர், இளைஞரணி தலைவர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் சென்றாயன், தேனி நகர தலைவர் ஓவியர் பிரவீன், கல்லுப்பட்டி ஆதித்தமிழன் ஆண்டிபட்டி அய்.ராஜா உள்பட ஏராளமான பகுத்தறிவாளர் கழக, திராவிடர்கழக தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சா. முருகன் நகரப் பொருளாளர் பகுத்தறிவாளர் கழகம் சார்பாக நன்றியுரை வழங்கினார்.
தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடம் கூட்டம்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books