தமிழ்நாடு நாள் ஜெர்மனியில் கொண்டாட்டம் தமிழ்நாடு அமைச்சர்கள் அர.சக்ரபாணி, டி.ஆர்.பி. ராஜா பங்கேற்பு

Viduthalai
2 Min Read

புதுடில்லி, டிச.9 ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் முதல் முறையாக தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு நாள்
ஜெர்மனியில் பிராங்க்பர்ட்டில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், அய்ரோப்பியத் தமிழர்கள் கூட்டமைப்பு. ஜெர்மனி தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய விழாவில் ஜெர்மனியில் உள்ள தமிழர்கள் திரளாக கலந்து கொண்டனர். முக்கிய விருந்தினராக தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வணிக முதலீடு மற்றும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்ரபாணி பேசுகையில், “எங்கள் முதலமைச்சர் பதவி ஏற்றபோது இந்திய தொழில்துறையில் தமிழ்நாடு 14-ஆவது இடத்தில் இருந்தது. அது தற்போது 3-ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. ஜெர்மனி வாழ் தமிழர்கள் தாய் நாடான இந்தியா, தமிழ்நாட்டை மறந்து விடாமல் ஏதாவது ஒரு வகையில் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டின் பெருமை
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும் போது, “பல தொழில் துறைகளில் இந்தியாவின் தலைநகரமாக தமிழ் நாடு விளங்குகிறது. எனவே, தமிழ் நாட்டின் பெருமையை இங்குள்ள தமிழர்கள் அன்றாடம் ஒரு மணி நேரமாவது வெளிநாட்டவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

பிராங்பர்ட்டில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரியும் தமிழ ருமான பி.எஸ்.முபாரக் பேசுகை யில், “பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5 டிரில்லியன் டாலரை நோக்கியும், தமிழ்நாடு ஒரு டிரில்லி யன் டாலரை நோக்கியும் வளர முயற்சிக்கின்றன. ஜெர்மனியில் பல தமிழர்கள் உயர் பதவிகளிலும், புதிய கண்டுபிடிப்பாளர்களாவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து இந்தியா நாள் ஜெர்மனி பல துறைகளில் வளர உதவலாம். இந்த தமிழ்நாடு தின நிகழ்ச்சியும் அதற்கு பயன் தரும்” என்றார்.
அய்ரோப்பிய கூட்டமைப்பின் அமைப்பாளர் செல்வகுமார் பேசுகை யில், “இனி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாள் அய்ரோப்பாவில் கொண்டாடப்படும். இங்குள்ள தமிழர் களுக்காக. ‘தமிழர் விருது’ வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இவ்விழாவில் தமிழ்நாடு நுகர்வோர் விநியோகத் துறை ஆணையர் மோகன், நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை. டிட்கோ இயக்குநரும் அயலகத் தமிழர்கள் பிரிவின் ஆணையருமான பி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இறுதியில் பிராங்க்பர்ட் தமிழ்ச் சங்க நிர்வாகி கண்ணன் நன்றி உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *