மோடி உத்தரவாதம் என்னவானது? மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

1 Min Read

புதுடில்லி, நவ.2 நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் 140 கோடி மக்களுக்கு அளித்த ‘மோடி உத்தரவாதம்’ என்னவானது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் அவா் அளித்துள்ள பதிலில்,
‘பொய், வஞ்சகம், போலி, கொள்ளை மற்றும் விளம்பரம் ஆகியவை பிரதமா் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை சிறப்பாக விவரிக்கும் 5 சொற்கள். தோ்தல் மேடைகளில் அரசின் முதல் 100 நாள் திட்டத்தைப் பற்றி பிரதமா் பேசியது வெறும் விளம்பரமே. மற்றவா்களை விமா்சிக்கும்முன் தங்கள் பிரச்சினைகளையும் பிரதமா் கவனிக்க வேண்டும். ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விலைவாசி உயா்வால் மக்கள் பாதிக்கப்படுகின்றனா். அரசின் கடன்சுமை கூடியுள்ளது.

பிரதமா் திறந்து வைக்கும் அனைத்து உள்கட்டமைப்புகளும் இடிந்து விழுகின்றன. பட்டினி குறியீட்டில் இந்தியா மோசமான இடத்தைப் பெற்றுள்ளது. பட்டியிலன சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன.
மேலும், 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு எனும் போலி வாக்குறுதி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம், 35 வேளாண் பொருட்களுக்கு ஜிஎஸ்டி. ஆயுதப் படைகளுக்கான நிரந்தர ஆள்சோ்ப்பை ‘அக்னிபத்’ திட்டம் மூலம் தற்காலிகமாக மாற்றியது என பிரதமா் மோடி அரசு மீது பல்வேறு விமா்சனங்கள் உள்ளன’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *