காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வலியுறுத்தி தீர்மானம் காஷ்மீர் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

viduthalai
1 Min Read

சிறீநகர், அக்.20- காஷ் மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி அளிக்கக்கோரி, உமர் அப்துல்லா அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட் டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் அரசி யல் சாசனத்தின் 370ஆவது பிரிவு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி ரத்து செய்யப் பட்டது. மாநிலத் தகுதி பறிக்கப்பட்டு, காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக் கப்பட்டது.
அதன்பிறகு சமீபத்தில் நடந்த காஷ்மீர் சட்ட மன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி – காங்கி ரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவி யேற்றார்.

மாநிலத் தகுதி

இந்நிலையில், உமர் அப்துல்லா தலைமை யில் முதலாவது அமைச் சரவைக் கூட்டம் நடந்தது. அதில், காஷ் மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி அளிக்கக் கோரி ஒன்றிய அரசை வலி யுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

முதலமைச்சர் உமர் அப்துல்லா விரைவில் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, அந்த தீர்மானத்தை ஒப்படைப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மீண்டும் மாநிலத் தகுதி அளிக்கு மாறு வலியுறுத்துவார் என்றும் தெரிவித்தன.
இந்த தீர்மானம் நிறைவேற்றியது குறித்தோ, அமைச்சரவையின் இதர முடிவுகள் குறித்தோ காஷ்மீர் அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக எதுவும் கூறப்படவில்லை.

சவால்கள்

உமர் அப்துல்லா, சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறி யிருந்ததாவது:-
முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், முக்கியமான நிர்வாக பிரச்சினைகள், சவால்கள் மற்றும் முன்னுரிமை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உள் கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வலுப்படுத் துவது பற்றியும் பேசப் பட்டது.

– இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *