மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேற்குவங்க மேனாள் முதலமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சாரியா அவர்களுக்கு வீரவணக்கம்!

viduthalai
1 Min Read

மேற்குவங்கத்தில் அதிக காலம் முதலமைச்சராக இருந்த தோழர் ஜோதிபாசு அவர்களுக்குப் பிறகு, 2000 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் இரண்டு முறை மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகவும் திகழ்ந்த புத்ததேவ் பட்டாச்சார்யா அவர்கள், தமது 80-ஆம் வயதில் (8.8.2024) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

முற்போக்கு இயக்கத்தின் மூத்த தலைவர்; சிறந்த கவிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், இலக்கிய ஆளுமையாகவும் விளங்கியவர்.

அவரது மறைவுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தையும், அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை
8.8.2024

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *