நீட் வினாத்தாள் கசிவு: அதிர்ச்சியோ, அதிர்ச்சி!

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 26- ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில், 120 மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆப்பரேஷனில், முன்னணி சமூக வலைதளங்களை தவிர்த்து மிகவும் கவனமான முறையில் குற்றவாளிகள் செயல் பட்டது சி.பி.அய்., விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.அய்., நடத்தி வரும் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து சி.பி.அய்., அலு வலக வட்டாரங்கள் கூறியதாவது:

நாடு முழுதும் 120 மாண வர்களை குறிவைத்து நடத்தப் பட்ட இந்த மோசடியில், வினாத்தாள் கசிவு தொடர் பான தகவல் வெளியே வராமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை குற்றவாளிகள் மேற்கொண்டுஉள்ளனர்.

தேர்வு நடக்கும் மய்யத்திற்குள் காலை 8:02 மணிக்கு நுழைந்த நபர்கள், அங்கிருந்த வினாத்தாள் அடங்கிய பார்சலை பிரித்து படம் பிடித்துள்ளனர். பின், அதை முன்பு இருந்தபடியே மூடிவைத்துவிட்டு 9:23 மணிக்கு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

வினாத்தாளின் புகைப் படத்தை பிரபலமான சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்வதை தவிர்த்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர்களை வேறு வழியில் தொடர்பு கொண்டு வினாத்தாளை அவர்கள் அளித்தது. விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
குற்றவாளிகளிடம் இருந்து 20 லட்சம் ரூபாய்க்கான முன்தேதியிட்ட காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பல மாணவர்கள் முன்பணமாக ஒரு தொகையை கொடுத்தது மட்டுமின்றி முன்தேதியிட்ட காசோலைகளை இந்த இடைத் தரகர்களுக்கு வழங்கிஉள்ளனர்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *