அன்று மன்மோகன் சொன்னது

1 Min Read

2014 இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் சொன்ன சில கருத்துகள் இன்று மீண்டும் சமூக ஊட கங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
2014 பொதுத் தேர்தலுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் மன்மோகன் சிங் என்ன சொன்னார்….?
அவர் சொன்னது இதுதான்:
“நான் யாருடைய தகுதியையும் அளவிடுபவன் அல்ல. ஆனால் நரேந்திர மோடி பிரதமர் ஆனால் அது இந்த நாட்டின் பெருந் துயரமாக மாறும். நான் பலவீனமான பிரதமர் என்று என்னைக் கருதவில்லை. வரலாறு என் மீது கருணை காட்டும் என்று நம்புகிறேன்.
அகமதாபாத் தெருக்களில் கள்ளங்கபடமற்ற அப்பாவிகளைக் கொன்று குவித்ததைத்தான் ஒரு வரின் ‘திறமை’ என்று நீங்கள் எண்ணுகிறீர்களா….?
எனக்கு அத்தகைய செயல்களில் நம்பிக்கையில்லை. நாட்டை ஆள வேண்டியது, அப்படிப்பட்ட திற மையை வெளிப்படுத்திய ஆளும் அல்ல. இன்று நரேந்திர மோடி அளிக்கும் வாக்குறுதிகள் ஒருபோதும் செயல்படுத்த முடியாதவை” என்றார்.
ஒரு வகையில் இது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் “மன்கீ பாத்”. ஒவ்வொரு சொல்லிலும் உண்மை வைரமாய் மின்னுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *