ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த நிலையில் சந்திரபாபுநாயுடு மனைவி சொத்து 5 நாளில் ரூ.584 கோடி உயர்ந்ததாம்!

1 Min Read

திருமலை, ஜூன் 11- ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடித்த நிலையில் அவரது ெஹரி டேஜ் புட்ஸ் பங்குகள் உயர்ந்து மனைவி சொத்து 5 நாட்களில் ரூ584 கோடி உயர்ந்துள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பங்குச் சந்தையில் பல ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன.

ஆந்திராவில் நடந்த தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி தனித்து 135 இடங்களிலும் கூட்ட ணியுடன் 164 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மேலும், கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஒன்றியத்தில் மோடியின் 3.0 ஆட்சியின் ‘கிங்’ மேக்கராக மாறி உள்ளார். ஆனால், அவரது நிஜ வாழ்க்கையின் இல்லத்து ராணி அவரது மனைவி நாரா புவனேஸ்வரி ஆவார்.

சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்க உள்ள சூழலில் புவனேஸ்வரி கடந்த 5 நாட்களாக பங்குச் சந்தையின் ‘ராணி’யாக வலம் வந்துள்ளார்.

புவனேஷ்வரியின் பங்குச் சந்தையின் சொத்து அய்ந்து நாட்களில் ரூ584 கோடியாக அதிகரித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஷ்வரி ஹெரிடேஜ் புட்ஸ் நிறு வனத்தில் 2 கோடியே 26 லட்சத்து 11 ஆயிரத்து 525 பங்குகளை வைத்துள்ளார். சந்திரபாபுவின் வெற்றியின் தாக்கம் அந்நிறுவனத்தின் பங்கு விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *