பாடப்பிரிவை தேர்வு செய்தோருக்கு உடனே ஒதுக்கீட்டு ஆணை!

2 Min Read

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது!

சென்னை, ஜூன் 9- அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தமிழ்நாடு முழுவதும் நேற்று  (8.6.2026) தொடங்கியது. பாடப்பிரிவை தேர்வு செய்த மாணவர்களுக்கு உடனடியாக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 180 அரசு கலை – அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஏ, பிஎஸ்சி, பிபிஏ, பிபிஎம் பிகாம், பிசிஏ உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 959 இடங்கள் உள்ளன.

இவற்றில் 2026-2027ஆம் கல்வி ஆண்டில் இந்த இடங்களில் சேருவதற்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு மே 7ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 24 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் தமிழ் மாணவர்கள் ஆகிய சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு அந்தந்த கல்லூரிகளில் ஜூன் 5 மற்றும் 6ஆம் தேதி நடந்தது.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தமிழ்நாடு முழுவதும் அந்தந்த அரசு கலை – அறிவியல் கல்லூரிக ளில் நேற்று  தொடங்கியது.

கலந்தாய்வில் பங்கேற்று பிடித்தமான பாடப்பிரிவை தேர்வுசெய்த மாணவர்களுக்கு உடனடியாக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

சென்னையில் மாநிலக் கல்லூரி, நந்தனம் அரசுக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி மற்றும் வியாசர்பாடி அரசுக் கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் பிடித்தமான பாடப்பிரிவை தேர்வுசெய்த மாணவர்கள் உடனடியாக ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுக்கொண்டனர்.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கிடையே, அரசுக் கல்லூரி களில் நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் ஜூன் 1 முதல் மீண்டும் விண்ணப்பிக்க கல்லூரி கல்வி ஆணையரகம் காலஅவகாசம் வழங்கியது.

அதன்படி மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு 2ஆவது கட்ட கலந்தாய்வு மூலம் பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை மாநில கல்லூரியில் உள்ள 2,380 இடங்களுக்கு 46 ஆயிரம் மாணவர்கள் பல வகையான பாடப் பிரிவுகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். நேற்று நடைபெற்ற பொது பிரிவினருக்கான கலந்தாய்வில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கட் ஆப் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

இதுகுறித்து சென்னை மாநில கல்லூரி முதல்வர் ராமன் கூறுகையில், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக அகில இந்திய ரேங்கில், சென்னை மாநிலக் கல்லூரி முதல் 10 இடங் களுக்குள் வருவதால் இக்கல்லூரியில் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில கல்லூரியில் விண்ணப்பித்துள்ளனர்.

முதன் முறையாக 22 ஆயிரத் திற்கும் அதிகமான மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக சென்னை, விழுப்புரத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சிறப்புப் பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவினர் சேர்த்து நேற்று வரை 30 சதவிகித இடங்கள் நிரம்பி விட்டது’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *