சத்தியமங்கலம், ஜூலை 9– ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்தவர் வான்மதி. அவரது தந்தை ஒரு ஓட்டுநர். அவர் காலையில் பள்ளிக்கு சென்று நன்றாக படித்து வந்தார்.
மாலை பள்ளி முடிந்ததும், மற்ற குழந்தை களுடன் விளையாட செல்லாமல், தனது குடும்ப ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டே அந்த பகுதியில் படித்து வந்தார்.
முதுகலை பட்டம் பெற்றார்
வழக்கம் போல பள்ளிப் படிப்பை முடித்தவுடன், வான்மதியின் திருமணம் குறித்து குடும்பத்தினர் பேசத் தொடங்கினர். ஆனாலும், அவரது குடும்பத்தாரின் உறுதுணையோடு, தனது விடாமுயற்சியால் கணினி பயன்பாட்டியலில் முதுகலை பட்டம் பெற்றார்.
இதோடு நிறுத்தாமல், தனது கனவான மாவட்ட ஆட்சியர் படிப்பிற்காக தீவிரமாகத் தயாராக தொடங்கினார்.
152-ஆவது இடம்
இதற்காகப் பல மணி நேரம் அயராது உழைத்த அவர், தோல்விகளைக் கண்டு தொய்வடையாமல், கடந்த 2015-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதில் அகில இந்திய அளவில் 152-ஆவது இடத்தை பிடித்தார் வான்மதி!
வர்தா மாவட்ட ஆட்சியர்
ஆடு, மாடு மேய்த்து கொண்டே படித்து, இன்று ஒரு மாவட்டத்தின் ஆட்சியராக உயர்ந்திருக் கும் வான்மதியின் இந்த சாதனைப் பயணம், தடைகளை உடைத்து சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகச்சிறந்த உத்வேகமாகும்.
தற்போது மராட்டிய மாநிலம் வர்தா மாவட்ட ஆட்சியராக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்.
