மக்களவைத் தேர்தலில் 200 இடங்களைக் கூட தாண்டாது பி.ஜே.பி. பற்றி மம்தா விமர்சனம்

1 Min Read

கிருஷ்ணாநகர், மே 20- வரும் மக்கள வைத் தேர்தலில் பாஜக 200 இடங் களைத் தாண்டாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சவால் விடுத் துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர் தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணாநகர் தொகுதி யில் திரிணமூல்காங்கிரஸ் சார்பில் 18.5.2024 அன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி வேட்பாளர் மஹுவா மொய்த் ராவை ஆதரித்து அம்மாநில முதலமைச் சரும் திரிணமூல் கட்சித் தலைவருமான மம்தா பேசியதாவது:
வரும் மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பாஜக கூறிவருகிறது.

ஆனால் 200 இடங்களைக் கூட அவர்களால் தாண்ட முடியாது என நான் சவால் விடுக்கிறேன். கடந்த 2021இ-ல் நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்க ளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பாஜக தெரிவித்தது. ஆனால், வெறும் 77 இடங்களில் மட் டுமே வெற்றி பெற்றது.
இந்திய குடிமக்களை வெளிநாட்டின ராக மாற்றுவதற்கான ஒன்றிய அரசின் தந்திரம்தான் குடியுரிமை திருத்த சட் டம் (சிஏஏ). எனவே, இந்த சட்டத்தின் கீழ் யாரும் விண்ணப்பம் செய்யாதீர்கள். சிஏஏ சட்டம், தேசிய குடிமக்கள் பதி வேடு (என்ஆர்சி) ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். வரும் தேர்தலில் மஹுவா மொய்த்ராவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *