தமிழ்நாடு அரசின் மறைமலை அடிகள் விருது பெற்ற மருத்துவர் சு.நரேந்திரன் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து!

1 Min Read

தஞ்சை, ஏப்.25-மருத்துவத்துறை யில் பல்வேறு சாதனைகளை செய்து வருபவரும், தமிழ் வழி மருத்துவக் கல்வியை தொடர்ந்து வலியுறுத்தி வருபவரும், பன்னாட்டு கருத்தரங்குகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த வருமான தஞ்சையின் தலைசிறந்த மருத்துவர் சு.நரேந்திரன் அவர்களின் மருத்துவ சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் மறைமலை அடிகள் விருதினை தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் வழங்கினார்.
23.4.2024 அன்று கழக காப் பாளர் மு. அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெய குமார், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி.க. அன்பழகன், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், கரந்தை பகுதி தலைவர் வெ.விஜயன், கரந்தை பகுதி செயலாளர் மு.தனபால் ஆகியோர் திராவிடர் கழகத்தின் சார்பில் மருத்துவர் சு.நரேந்திரனுக்கு பயனடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *