











‘நீட்’ தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை
யில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதியுள்ள ‘‘நீட்: தகுதி திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக் கண்ணா?’’ என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டது.
திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் உமா, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் அரிமா அசாருதீன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே ஹரீம், மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். யாக்கூப், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் நிஜாமுதின், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா, ம.திமுக.வின் அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழு தலைவர் மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினர்.


சென்னை

கடலூர்

தஞ்சாவூர்
